districts

img

பாக்கு மட்டை தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு கோட்டாச்சியரிடம் பொதுமக்கள் மனு

தாராபுரம், ஜன.22- தாராபுரத்தில் பாக்கு தட்டு தயா ரிப்பு தொழிற்சாலைக்கு அனுமதி  வழங்க கூடாது என கோரி, தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற் றும் பொதுமக்கள் சார்பில் கோட்டாச்சி யர் அலுவலகத்தில்  மனு அளிக்கப்பட் டது.  இதுகுறித்து அம்மனுவில் கூறப் பட்டிருப்பதாவது, தாராபுரம் வட்டம், வடுகபாளையம் கிராமத்தில் பொது மக்கள் குடியிருப்பு பகுதி அருகில் விவ சாயம் செய்வதாக கூறி அந்த பகுதி யில் கரூர் மாவட்டம் பள்ளபட்டி பகு தியை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று சுமார் 3 ஏக்கர் நிலம் வாங்கியுள் ளது.அதனை தொடர்ந்து அந்த இடத்தை சுற்றிலும் தடுப்பு சுவர் எழுப்பி யுள்ளனர். தற்போது, அந்த இடத்துக் ்குள் தொழிற்சாலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இதுகுறித்து அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த  இடத்தில் கேரளாவிலிருந்து பாக்கு, மா இலைகளை கொண்டு வந்து  பாக்கு தட்டு மற்றும் டம்ளர் உள்ளிட்ட  பொருட்களை தயாரிக்கும் தொழிற் சாலை அமைக்கப்படவுள்ளதாகவும், இதனால் இப்பகுதியில் 100க்கும் மேற் பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு  கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.  இந்தப் பகுதியில் பாக்கு மட்டை தயாரிக்கும் தொழிற்சாலை துவங்கி னால் அந்த மட்டையை ஊறவைக்கும் தண்ணீரின் கழிவுநீர் நேரடியாக சுத்திகரிக்கப்படாமல் நிலத்தடியில் செல்லும்.  அப்போது அப்பகுதியை சுற்றி உள்ள விவசாய கிணறுகள் மற்றும் விவசாய நிலங்கள் மாசு பட வும், பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயமும் உள் ளது.  மேலும், இந்த நிறுவனம் குடியி ருப்பு பகுதியில் தொழிற்சாலை தொடங்குவதற்கு சம்மந்தப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளி டமோ, ஊரக கட்டமைப்பு துறை மற் றும் தொழில் சார்ந்த துறையிடமோ  எந்த அனுமதியும் பெறவில்லை.  எனவே, இந்த தொழிற்சாலையின் கட் டுமானம் நிறைவு அடையும் முன்பே  நேரில் ஆய்வு செய்து உடனடியாக இந்த தொழிற்சாலையை தடை செய்யு மாறு இந்த மனுவில் கூறப்பட்டுள் ளது. முன்னதாக, மனு அளிக்க சென்ற போது கோட்டாச்சியர் குமரேசன் திருப் பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திற்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப் பட்டது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த கோட்டாச்சியர் அலுவலக ஊழியரிடம் மனு அளிக்கப்பட்டது. அப் போது அப்பகுதியை சேர்ந்த விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.