districts

img

ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

ஈரோடு, ஜூன் 23- ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதார பணியை தனியாருக்கு கொடுக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி  வேலை நிறுத்தம் நடைபெற்றது.  ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணி களை காண்ட்ராக்ட் அடிப்படையில் தனியா ருக்குவிட அனுமதித்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியிடங்கள் ரத்தாகும். தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற் படும். 50 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்க ளுக்கு வேலை மறுக்கப்படும். நாளொன் றுக்கு ரூ.707 ஊதியம் பெற்றுவரும் தொழிலா ளர்களின் ஊதியம் குறைக்கப்படும். வேலைப் பளு பல மடங்கு அதிகரிக்கும். பணி நிரந்தரம்  என்பதே இல்லாமல் போகும் அபாயம் உள் ளது. எனவே, ஈரோடு மாநகராட்சி தூய்மை பணிகளை தனியாருக்கு காண்ட்ராக்ட் விடு வதை கைவிட வேண்டும். 480 நாட்கள் பணி யாற்றிய தினக்கூலி பணியாளர்களை நிரந் தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி மற்றும்  எஎல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த 15 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.  

அனைத்து தொழிற்சங்கங்களின் எதிர்ப்பை உதாசீனப்படுத்தி, கடந்த 7 ஆம் தேதி ஏலம் தொடர்பான முன் தயாரிப்பு கூட் டத்தை மாநகராட்சி நடத்தியது. இதனைக் கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை முற் றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதை யடுத்து மாநகராட்சி மேயர், ஆணையர், தொழிலாளர் உதவி ஆணையர் முன்னிலை யில் வார்த்தை நடைபெற்றது. இதனைய டுத்து 22 ஆம் தேதி வரை போராட்டம் ஒத்தி  வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந் நிலையில், 22 ஆம் தேதி (வியாழனன்று) தொழிலாளர் உதவி ஆணையர் முன்னிலை யில் நடைபெற்ற மூன்றாவது கட்ட சமரசப் பேச்சுவார்த்தையில் மாநகராட்சி நிர்வாகத் தரப்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. எனவே, ஜூன் 26 ஆம் தேதிக்கு பேச்சு வார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தூய்மை பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கண் டித்து ஈரோடு மாநகராட்சியில் உள்ள நூற்றுக் கணக்கான தூய்மை பணியாளர்கள் வெள்ளி யன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர். முன்னதாக தொழி லாளர்களின் போராட்டத்தை வாழ்த்தி, எல்பிஎப் கிருஷ்ணன், சிஐடியு தலைவர் எஸ். சுப்ரமணியன், எஸ்.மாணிக்கம், ஜெகநாதன், ஏஐடியுசி சின்னசாமி மற்றும் தொழிலாளர் கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர்  கே.ராஜ்குமார் உள்ளிட்டோர் உரையாற்றி னர்.