அவிநாசி, செப்.19- அவிநாசி பந்தம்பாளையம் பகுதியில் மதுபானக் கடை திறக்க எதிர்ப்புத் தெரி வித்து பொதுமக்கள் செவ்வாயன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டி ருந்த மக்கள் கூறுகையில், திருப்பூர் மாவட் டம், அவிநாசி வட்டம் சேவூர் பந்தம்பாளை யம் க/ச எண்-63/2ஏ என்ற ஓய்வு பெற்ற தலை மையாசிரியருக்கு சொந்தமான இடத்தில் அரசு மதுபானக் கடை, மனமகிழ் மன்றம் அமைப்பதற்கான நடவடிக்கை கடந்த 6 மாதத்துக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. இதையறிந்த எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து, முதல்வர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். மேலும், வேட்டுவபாளையம், சேவூர், முறி யாண்டம்பாளையம் ஆகிய ஊராட்சி கிராம சபை கூட்டத்திலும் இந்த மதுபான கடைக்கு எதிர் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. தற்போது இக்கடை திறப்ப தற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்றனர். இப்போ போராட் டத்தை அடுத்து ஏராளமான போலீசார் குவிக் கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.