உதகை, ஜூலை 10– புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் ரயில் மறியலில் ஈடுபட முயன்றதால், போலீசாரும் வழக்கறிஞர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட் டது. ஒன்றிய பாஜக அரசு, மூன்று குற்றவியல் சட்டங்களை தான்தோன்றித்தனமாக கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சி எம்பிக் கள் அனைவரையும் இடைநீக்கம் செய்து விட்டடு இச்சட்டத்தை கொண்டு வந்துள் ளது. இச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவ தும் பெரும் போராட்டம் எழுந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக நீலகிரி மாவட்ட பார் அசோசியேஷன் சார்பில் வழக்கறிஞர் கள் உதகை ரயில் நிலையத்தில் புதனன்று ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப் போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி யதால் அங்கு போலீசாருக்கும் வழக்கறிஞர் களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், பார் கவுன்சில் தலைவர் மகாதேவன் தலைமை வகித்தார். செயலாளர் மேனகா முன்னிலை வகித்தார். பார் கவுன்சில் பொரு ளாளர் ரேஷ்மா, துணைச் செயலாளர் சுருதி, வழக்கறிஞர்கள் விஜயன், சந்திரபோஸ், முனிரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர். கோவை இதேபோன்று கோவையில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில், கோவை வழக் கறிஞகர் சங்கத்தின் தலைவர் பாலகி ருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் சுதீஷ் முன்னிலை வகித் தார். வழக்கறிஞர்கள் தீபக், ஆனந்தி ஈஸ்வரன், மலரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்டத்திருத்தங் களை திரும்ப பெற வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஈரோடு ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.