நாமக்கல், அக். 3- சமய சங்கிலி ஊராட்சியை நகராட்சி உடன் இணைக்கும் முடிவிற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள பள்ளிபாளையம் ஒன்றியத் துக்கு உட்பட்ட பகுதியில் சமய சங்கிலி ஊராட்சி அமைந்துள்ளது. இரண்டாயி ரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் திருநாளை ஒட்டி அதிகளவு கரும்புகள் பயிரிடப்பட்டு பல்வேறு மாவட் டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதி களவு விவசாயப் பணிகள் மட்டுமே நடை பெறும். சமய சங்கிலி கிராமத்தை பள்ளி பாளையம் நகராட்சியுடன் இணைக்கும் பணி நடைபெறுவதாகவும், அப்படி சமய சங்கிலி பஞ்சாயத்து பகுதியை பள்ளிபாளையம் நக ராட்சியுடன் இணைக்கும் பட்சத்தில் விவசாயி களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாய நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறிவிடும். தொழிற்சாலைகள் ஊருக்குள் வரும். மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் சுமார் 1200 பேர் பதிவு செய்துள்ள நிலையில், அதில் 700 நபர்கள் பயனடைந்து வருகிறார்கள். வீட்டு வரி, குடிநீர் வரி உள் ளிட்ட அனைத்து விதமான வரிகளும் அதிக ரிக்கும். இப்படி நகராட்சியோடு இணைக்கும் பொழுது ஏராளமான பாதிப்புகளை சந்திக்க வேண்டி இருப்பதால், பள்ளிபாளையம் நக ராட்சியுடன் சமய சங்கிலி கிராமத்தை இணைக்கும் முடிவினை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சமயசங்கிலி கிராமத்தை சேர்ந்த நூற்றுக் கும் மேற்பட்ட பொதுமக்கள் புதனன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஊராட்சி ஒன்றிய செயல் அலுவலர் கிரிஜாவிடம் ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர். மனுவை பெற்றுக் கொண்ட அலுவலர் கிரிஜா மனு வின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் காரண மாக பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலு வலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.