திருப்பூர், மே 26 – திருப்பூர் மாநகராட்சிக்கு அருகாமையில் இருக்கும் முதலிபாளையம், இடுவாய் மற் றும் மங்கலம் ஊராட்சிகளை மாநகராட்சி யுடன் இணைக்கக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து, மேற்கண்ட ஊராட்சிகளின் தலை வர்கள் மாநில அமைச்சர் மு.பெ.சாமிநாதனி டம் மனு அளித்தனர். திருப்பூர் மாநகராட்சியோடு மங்கலம், இடுவாய், முதலிபாளையம் கிராம ஊராட்சி களை இணைக்கக்கூடாது என மே 1-ல் இந்த ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், வெள்ளியன்று பெருமாநல்லூ ரில் தனியார் திருமண மண்டபத்தில் அத்திக்க டவு - அவிநாசி திட்ட கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் மங்கலம், இடுவாய், முதலிபாளையம் உள் ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், மாநக ராட்சியுடன் தங்கள் ஊராட்சிகளை இணைக் கக்கூடாது என்று கோரிக்கை மனு அளித்த னர். கிராம சபைக் கூட்ட தீர்மான அடிப்படை யில் நடவடிக்கை எடுக்கவும் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர்.
முன்னதாக, திருப்பூர் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் கூட்டமைப்பின் கூட்டம் முதலி பாளையம் ஊராட்சியில் வெள்ளியன்று நடை பெற்றது. இக்கூட்டத்தில், ஊராட்சிகளில் இணையதளம் மூலம் வரி வசூல் செய்யும் நடைமுறை மே 22 ஆம் தேதியன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் உள்ள குறைபாடுகளைப் போக்கவும், பொதுமக் கள் சிரமத்தைக் களையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி ஊராட்சித் தலைவர்களை அவமதித்த திருப்பூர் ஒன் றிய ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க ஆட் சியரிடம் இரு முறை மனுக் கொடுத்தும் நட வடிக்கை எடுக்கப்படவில்லை. உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா காலத்தில் ஊராட்சிகளுக்கு குறைவான நிதி வழங்கப்பட்டது. இனிவரும் காலத்தில் ஊராட்சிகளுக்கு நிதியை அதி கரித்து வழங்க வேண்டும். ஊராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் குடிநீர், துப்புரவு பணியாளர்களை ஒப்பந்த அல்லது தினக்கூலி அடிப்படையில் சேர்த்துக்கொள்ள ஊராட்சிகளுக்கு அதிகா ரம் வழங்க வேண்டும். பட்டம்பாளையம், மேற்குபகுதி ஊராட்சிகளுக்கு உடனடியாக ஊராட்சி செயலர்கள் நியமிக்க வேண்டும். தொரவலூர் ஊராட்சிக்கு நூறு நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளர் நியமிக்க வேண் டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளும் அமைச்சர் மு.பெ.சாமிநா தனிடம் வழங்கப்பட்டது.