கோவை, பிப்.5- கீரணத்தம் ஊராட்சியை கோவை மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சர்க்கார் சாமகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீர ணத்தம் ஊராட்சியை கோவை மாநகராட்சியுடன் இணைப்ப தாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அர சின் இந்த முடிவால் நடுத்தர ஏழை மக்கள் வசிக்கும் கீர ணத்தம் மக்கள் வரிச் சுமையால் மிகும் பாதிக்கப்படுவோம் எனக்கூறி கீரணத்தம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள், பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர். கீரணத்தம் ஊராட்சியை மாநகராட்சி யுடன் சேர்க்கக் கூடாது என வலியுறுத்தி ஏற்கனவே கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்திய பொதுமக்கள் புதனன்று கீரணத்தம் பேருந்து நிலையம் முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் இதேபோன்று, ஆச்சிபட்டி கிராம பஞ்சாயத்தை பொள் ளாச்சி நகராட்சியோடு இணைப்பதை எதிர்த்து பொதுமக் கள், அரசியல் கட்சியினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.