districts

img

ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

ஈரோடு, ஆக. 5- கிராம ஊராட்சிகளை மாநகராட் சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரி வித்து மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத் தினர்திங்களன்று ஈரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மாநில அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் நிர்வாகத்திலேயே, ஈரோடு மாவட் டத்தில் உள்ள, எலவமலை, மேட்டு நாசுவம்பாளையம், பேரோடு, கதி ரம்பட்டி, கூரபாளையம், பிச்சாண் டம்பாளையம் ஆகிய கிராம ஊராட் சிகள் நீடிக்க வேண்டும். இங்கு வசிக்கும் விவசாயத் தொழிலாளர் கள், கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் சட்டப்படி வேலை பெறும் வாய்ப்பை பறிக்கக் கூடாது. அரசு வழங்கும் இலவச வீடுகள் மற்றும் கிராமப்புற பொதுமக்களுக் கான சிறப்பு நலத்திட்ட உதவிகளை பறிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக் கைகள் முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பு திங்களன்று நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க் சிஸ்ட் கட்சியின்தாலுகா செயலா ளர் என்.பாலசுப்பிரமணி, விதொச தாலுகாச் செயலாளர் என்.நாகரா ஜன் ஆகியோர் தலைமை ஏற்ற னர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுரா மன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கோமதி, ஜி.பழனிசாமி,மாவட் டக்குழு உறுப்பினர்பா.லலிதா மற்றும் விதொச மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராகவன் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். முடிவில், கே.முருகன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, வட்டாட்சியரிடம் கிராம ஊராட்சி களை மாநகராட்சியில் இணைக்க கூடாது என வலியுறுத்தி மனு அளித்தனர்.