தருமபுரி, ஆக.7- வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தில், பிணத்தின் மீது பிர தமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் அரசியல் செய்து வருகின்றனர், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் விமர்சித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில், நாடாளுமன்ற தேர் தல் முடிவுகள் விளக்கப் பேரவைக் கூட்டம், தருமபுரி ஸ்ரீசாய் சாமுண் டீஸ்வரி திருமண மண்டபத்தில் புத னன்று நடைபெற்றது. சிபிஎம் மாவட் டச் செயலாளர் ஏ.குமார் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் என்.கந்தசாமி வரவேற்றார். இக் கூட்டத்தில், சிபிஎம் மாநில செயற் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் பேசு கையில், கடந்த நாடாளுமன்றத் தேர் தலில் தருமபுரி மாவட்டத்தில் சாதிய சக்திகள், அடையாள அர சியல் செய்பவர்கள் தோற்கடிக்கப் பட்டுள்ளனர். சாதிய அரசியலை துடைத்தெரிந்து, வர்க்க அரசியலை கொண்டு சேர்க்க வேண்டும். தரும புரி மாவட்டத்தில் கணிசமான மக் கள் வேலைத்தேடி அண்டை மாநி லங்களுக்கு சென்றுள்ளனர். இங் கேயே வேலை கிடைக்க உடனடி யாக சிப்காட் அமைக்க வேண்டும், என்றார்.
பிணத்தின் மீது அரசியல்
இதன்பின் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், தமிழ்நாட்டில் 5 பதிப் புகளில் தீக்கதிர் நாளிதழ் வந்து கொண்டிருக்கிறது. தொழிலாளர் கள், மக்கள் பிரச்சனைகள் குறித் தான உண்மையை உரக்க சொல் லும் பத்திரிக்கையாக தீக்கதிர் வந்து கொண்டிருக்கிறது. கட்சியின் வளர்ச்சிக்கு தீக்கதிர் முக்கிய பங்கு வகிக்கிறது. கேரளாவில் மிகப் பெரிய அளவில் இயற்கை இடர் பாடு ஏற்பட்டுள்ளது. இதில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 200 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. பலர் படுகாயம டைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற் கனவே, கேரளாவில் ஏற்பட்ட தேசிய பேரிடருக்கு ஒன்றிய அரசு அறி வித்த நிவாரணம் வழங்கப்பட வில்லை. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் என யாரும் பாதிக்கப் பட்ட இடத்தை பார்வையிட வில்லை. மாறாக, கேரளா அரசு மீது குற்றம் சுமத்துகின்றனர். பிணத்தின் மீது மோடி அரசு அரசியல் செய்கி றார். ஒன்றிய அரசு மஞ்சள் எச்ச ரிக்கை தான் விடுத்தது. 16 சென்டி மீட்டர் மழை அளவுதான் கணிக்க முடியும். 58 சென்டிமீட்டர் மழையை கணிக்க இந்தியாவில் தொழில்நுட் பம் இல்லை; தொழில்நுட்பத்தை ஏற்படுத்தவில்லை. தொடர்ந்து பேரிடரை சந்தித்துவரும் கேரளா மாநிலத்திற்கு நிவாரணத் தொகை ஒன்றிய அரசு வழங்காமல், எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சித்து வருகிறது. அண்டை மாநி லங்கள், கேரளாவிற்கு உதவி வரு கின்றன. கேரளா அரசு சவால்களை எதிர்கொண்டு மக்களுக்கு சேவை யாற்றி வருகிறது.
வலுவான நிலையில் எதிர்கட்சிகள்
சுற்றுசூழல் பிரச்சனை காரண மாக அதிக மழை, அதிக வெப்பம் பதிவாகி வருகிறது. இதற்கு கார ணம் இயற்கையை அழிப்பதுதான். குறிப்பாக, லாப வெறிக்காக இயற்கை வளத்தை கார்ப்பரேட் கள் அழித்து வருகின்றனர். சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. மோசமான மக் கள் விரோத செயல்பாடுகளால் பாஜக தற்போது தனிப்பெரும் பான்மை இல்லாத அரசாக உள் ளது. இந்தியா கூட்டணி பலம் அதி கரித்துள்ளது. வரும் 5 மாநில சட்ட மன்ற தேர்தலில் பாஜக படுதோல்வி யடையும். அண்ணல் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டத்தை பாஜக மாற்ற நினைத்தது. தற் போது ஒரு புள்ளி, காமா கூட மாற்ற முடியாத அளவிற்கு, வழுவான நிலையில் எதிர்கட்சிகள் இருக் கின்றன. தமிழ்நாட்டில் இந்தியா கூட் டணி 100 சதவிகித வெற்றியை பெற் றுள்ளது என்றார். இந்நிகழ்வில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.சிசுபாலன், மூத்த தலைவர் பி.இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.மாதன், எம். முத்து, சோ.அருச்சுணன், எஸ்.கிரை ஸாமேரி, வே.விசுவநாதன், ஆர். சின்னசாமி, வி.ரவி, ஆர்.மல்லிகா, தி.வ.தனுசன், ஒன்றியச் செயலாளர் கள் டி.எஸ்.ராமச்சந்திரன், சி.முரளி, எஸ்.எஸ்.சின்னராசு, பி.குமார், பி. ஜெயராமன், ஜி.சக்திவேல், என்.பி. முருகன், வெங்காடச்சலம், கே. தங்கராஜ், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.