கோவை, ஆக.19- கோவையில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர்ப்புற வீடற்றோர் காப்பகம் திங்களன்று திறக்கப் பட்டது. கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், 80 ஆவது வார்டுக்குட்பட்ட கெம்பட்டி காலனி பகுதியில், மாநக ராட்சிக்கு சொந்தமான இடத்தில் தனியார் நிறுவனத்தின் முழு பங்களிப்புடன் ரூ.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 25 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிதாக நகர்ப்புற வீடற் றோர் காப்பகம் கட்டப்பட்டது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் ஆகியோர் திங்களன்று திறந்து வைத்தனர். ஏற்கனவே முதல் தளம் திறக்கப் பட்டு, அங்கு முதியோர்கள் வசித்து வரும் முதியோர் களிடம் குறைகளை கேட்டறிந்தனர். இந்நிகழ்வில், மாந கராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றி செல்வன், பொது சுகாதாரக் குழு தலைவர் மாரிசெல்வன், பூச் (BOSCH) நிறுவன அலுவலர் நவேத் நாராயணன், ஹெல்பிங் ஹார்ட்ஸ் தொண்டு நிறுவனத் தின் கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.