districts

img

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு

கோவை, ஜூன் 12- கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகம் முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு  பள்ளிகள் திங்களன்று திறக்கப்பட்டது. மாண வர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு சென் றனர். தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்.29 ஆம் தேதி முதல் கோடை விடு முறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1 ஆம் தேதியும், 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 5 ஆம் தேதி யும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது.  ஆனால், தமிழகம் முழுவதும் கோடை வெயி லின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் எனப்படும் கத் தரி வெயில் மே மாதத்தில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. மாறாக அதற்கு பிறகுதான் வெயில் அதிகமாக கொளுத்த தொடங்கியது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.  எனவே பள்ளிகள் திறப்பை ஜூன் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.  ஆனாலும், பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்தது. எனவே, பள்ளிகள் திறக்கப்படுவதை மேலும் தள்ளி வைக்குமாறு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக் கப்பட்டது. இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் பள்ளிகள் திறக்கப்படுவது 2 ஆவது முறை யாக மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.  இந் நிலையில் நடப்பு கல்வியாண்டில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு திங்களன்றும்,  1  முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு வருகிற 14 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறி விக்கப்பட்டது. அதன்படி, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  திங்களன்று பள்ளி கள் திறக்கப்பட்டன. இதற்காக அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் செய்து முடிக்கப்பட்டு பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன. இத னைத்தொடர்ந்து, மாணவர்கள் உற்சாகத்து டன் பள்ளிக்கு சென்றனர். நீண்ட நாட்களுக்கு பின் பள்ளி நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சி யில் ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி தங்க ளது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டு - புத்தகங்கள், சீருடைகள், காலனி கள் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்கள் வழங் கப்பட்டன.