ஈரோடு, மே 30- ஈரோடு மாநகராட்சி வளாகத்தில், மக்க ளுக்கான மக்கள் சேவை மையத்தினை வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார். ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ண னுண்ணி தலைமையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மாநகராட்சி மக்களுக்கான மக்கள் சேவை மையத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் முத்துசாமி செய் தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்திற்கென ஏறத்தாழ 85 திட்டங் களை முன்னெடுத்து, பணிகள் துவங்கப் பட்டுள்ளது. இன்றைக்கு ஈரோடு மாநக ராட்சி மக்களுக்கான மக்கள் சேவை மையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு மாநகராட்சியினால் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் தொடர்பான விண் ணப்பங்கள், மாநகராட்சியினால் வழங்கப் படும் அத்தியாவசிய பணிகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் மற்றும் பிற துறை தொடர்பான சேவைகளான ஆதரவற்ற முதியோர் உதவித்தொகை வழங்க கோரு தல், வீடற்றவர்களுக்கான வீடு வழங்க கோருதல், குடும்ப அட்டை வழங்க கோரு தல் முதலான கோரிக்கை மனுக்கள் மீது இம்மையத்தினால் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, உடனடி தீர்வுகாண நடவ டிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும் இச்சேவை 24 மணிநேரமும் தொடர்ந்து இயங்குகின்ற ஒரு சூழ்நிலை உருவாக்கப் படும்.
அதேபோல், ஈரோடு மாநகராட்சிக்குட் பட்ட சாலைகளில் காய்கறி, பழங்கள், உணவு வகைகள் மற்றும் பூ வியாபாரம் செய்து வரும் 127 சாலையோர வியாபாரி களுக்கு தேவையான விற்பனை வண்டி களை தேசிய நகர்புற வாழ்வாதார இயக் கம் திட்டத்தின் கீழ் ரூ.1.05 கோடி மதிப் பீட்டில் வழங்க தமிழ்நாடு அரசால் மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 10 காய்கறி விற் பனை வண்டி, 10 பழ விற்பனை வண்டி, 5 உணவு வகைகள் விற்பனை வண்டி, 15 பூ விற்பனை வண்டி ஆகிய சாலையோர வியா பாரிளுக்கு வழங்கப்படுகிறது என்றார். இந்நிகழ்ச்சிகளில், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், ஈரோடு நாடாளு மன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, துணை மேயர் வே.செல்வராஜ், மாநக ராட்சி ஆணையர் சிவகுமார், மண்டல தலை வர்கள் ப.க.பழனிச்சாமி (1வது மண்டலம்), மு.ப.சுப்ரமணியம் (2வது மண்டலம்), ப.சசி குமார் (3வது மண்டலம்), நா.தண்டபாணி (4வது மண்டலம்) உட்பட உதவி ஆணை யர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள் ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.