districts

img

புதிய வாரச்சந்தை, நூலகம், அறிவுசார் மையம் திறப்பு

ஈரோடு, ஜன. 6- அந்தியூர் பேரூராட்சியில் புதிய வாரச்சந்தை, புதிய நூலகம், அறிவு சார் மையம் மற்றும் 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு தங்குமிடம் உள்ளிட்ட ரூ.505.69 கோடி மதிப்பிலான முடி வுற்ற பணிகளை தமிழ்நாடு முதல மைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த 442  ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.412 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டம். கொடுமுடி ஊராட்சி ஒன்றி யத்தைச் சார்ந்த 144 ஊரக குடியிருப் புகளுக்கு ரூ.87 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கூட் டுக் குடிநீர் திட்டம். பேரூராட்சிகளின் இயக்குநரகத்தில் அந்தியூர், சிவகிரி,  நம்பியூர், நசியனூர் பகுதிகளில்  மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை கள், பெருந்துறை, கருமாண்டிசெல்லி பாளையம் பேரூராட்சியில் 1 கோடியே  37 லட்சம் ரூபாய் செலவில் கட்டப் பட்டுள்ள சிறப்பு தங்குமிடம் ஆகிய வற்றினை முதலமைச்சர் திறந்து வைத்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தலை மைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத் தார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தில் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர் வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன் கரா, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நீலகிரி இதேபோன்று நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி காந்தல் பகுதியில் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் ‘கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ்’  நூலகம் மட்டும் அறிவுசார் மையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.  நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு மையக்  கட்டிடத்தை பார்வையிட்டார். மேலும்,  மாணவ, மாணவர்களுக்கு இனிப்பு களை வழங்கினார்.