districts

img

புதிய ஐஏஎஸ் அகாடமி திறப்பு

கோவை, ஜூலை 6- சூலூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல் லூரி வளாகத்தில் கிராமப்புற மாணவர்களுக்காக புதிய ஐ.ஏ.எஸ் அகாடமி துவக்கப்பட்டது.  கோவை மாவட்டம், சூலூரில் உள்ள கலை மற்றும் அறிவி யல் கல்லூரி வளாகத்தில் பத்மாவதி ஐ.ஏ.எஸ் அகாடமி  என்ற பெயரில் புதிய பயிற்சி நிறுவனம் வெள்ளியன்று துவக் கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஆர்விஎஸ் கல்வி அறக்கட்டளை யின் நிர்வாக அறங்காவலர் மருத்துவர் செந்தில் கணேஷ் தலைமை வகித்தார். மருத்துவர் கல்பனா கோபாலன் ஐஏஎஸ் முன்னிலை வகித்தார். ஷிகர் ஸ்பின் டெக் எக்யூப்மென்ட் நிறுவனத்தின் இயக்குனர் ஜி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதில், ஆர்.வி.எஸ் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மருத்துவர் செந்தில் கணேஷ் பேசுகையில், கிராமப்புற  மாணவர்களுக்கு அரசாங்க வேலைகளில் நுழைவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த ஐ.ஏ.எஸ் அகாடமியை துவக்கியுள்ளோம். மாணவர்களை அரசாங்க சேவைகளுக்கு தேவையான திறன்கள் மற்றும் அறிவுடன் பொருத்தமானவர்களாக மாற்றுதல், அரசாங்கத்தில் திறமை யான மற்றும் அர்ப்பணிப்புள்ள அதிகாரிகளை உருவாக் குதல் உள்ளிட்ட நோக்கத்தின் அடிப்படையில் பத்மாவதி ஐ.ஏ.எஸ் அகாடமி செயல்படும். அரசு சேவைகளில் சேர  விரும்பும் மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் இங்கு பயிற்சி  மற்றும் வழிகாட்டுதல்களை பெறலாம் என தெரிவித்தார்.