வேலூர், ஜன. 4- விஐடி கல்விநிறுவனம் கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வைக் குறைப்பதில் பெரும் முயற்சி எடுத்துவருகிறது. இதன் ஒருபகுதியாக வேலூர் விஐடி யில் 110-கிலோவாட் கேஸ் இன்சுலேட்டட் துணை நிலையத்தை விஐடி நிறுவனர் வேந்தர் கோ. விசுவநாதன், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், டாக்டர் சேகர் விசுவநாதன், உதவித் துணைத் தலைவர் காதம்பரி ச. விசுவநாதன் மற்றும் விஐடி போபால் அறங்காவலர் ரமணி பாலசுந்தரம் முன்னிலையில் திறந்து வைத்தார். இது இந்தியக் கல்வி நிறுவனங்களில் முதலாவது உயர் மின்னழுத்த துணை மின்நிலையமாகும். இதில் முக்கிய கடத்தும் கட்டமைப்புகள் ஒரு சிறிய சீல் செய்யப்பட்ட சல்பர் ஹெக்ஸாபுளோரைடு வாயுவில் கடத்தப்படாத சூழலாக வைக்கப்படுகின்றன. ஏர்-இன்சுலேட்டர் சப்ஸ்டேஷன், வளிமண்டலக் காற்று மின்கடத்தா வாயு ஊடகமாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் பெரிய பரப்பளவு கொண்டது. எல்லாவற்றிற்கும் மேலாக விஐடி-வேலூர் வளாகம் 1.30 லட்சம் மரங்கள் மற்றும் சுமார் 30விழுக்காடு பசுமை யாக புல்வெளி, மரங்கள் மற்றும் மருத்துவ தாவரங்களால் சூழப் பட்டுள்ளது. இவை அனைத்தையும் கொண்டு விஐடி கார்பன் டைஆக்சைடு உமிழ்வைக் குறைப்பதில் பெரும் முயற்சி எடுத்துள்ளது. மற்றவர்களுக்கு உதாரண மாக இது கார்பன் தடயங்களைக் குறைத்தல், புதுப்பிக்கத்தக்க சக்தியை பயன்படுத்துதல், பசுமையை வளர்ப்பதில், நீர் பாதுகாப்பு உத்திகளை செயல்படுத்துதல் ஆகியவற்றில் அதன் அர்ப்பணிப்பை இவை பிரதிபலிக்கிறது.