நாமக்கல், செப்.29- ராசிபுரத்தில், தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவு படிப்பகம் திறக்கப் பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் மறைந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி-யின் நினைவு படிப்பகம் திறப்பு விழா நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் விஜய லட்சுமி தியேட்டர் அருகே நடைபெற் றது. வடக்கு நகரச் செயலாளர் சி. சண்முகம் தலைமை வகித்தார். தெற்கு நகரச் செயலாளர் கண்ணன் வரவேற் றார். மூத்த தலைவர் எம்.ஜி.ராஜகோ பால் படிப்பகத்தை திறந்து வைத்தார். கல்வி சிந்தனையாளர்கள் மன்றத் தலை வர் கே.எசந்தராவ் புத்தகங்கள் வழங்கி, படிப்பகத்தை துவக்கி வைத்தார். தோழர் யெச்சூரி-யின் உருவப்படத் தினை திறந்து வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் எஸ்.கந்தசாமி சிறப்புரையாற் றினார். நகர்மன்றத் தலைவர் வி.பாலு, மதிமுக மாவட்ட அவைத்தலைவர் ஜோதிபாசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் மணிமாறன், விசிக நகர்மன்ற உறுப்பினர் பழனிச்சாமி, தபெ திக நகரத் தலைவர் பிடல் சேகுவேரா, தேமுதிக நகரப் பொருளாளர் நடரா ஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் பெரிய சாமி, ஆட்டோ தொழிலாளர் சங்கத் தலைவர் சதாசிவம், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ராணி வாழ்த்திப் பேசி னர். ஒன்றியக்குழு உறுப்பினர் கே.கே. விஜயேந்திரன் நன்றி கூறினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.