கோவை, டிச.7- தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் கட்டப் பட்ட அடுக்குமாடி குடியிருப்களை கோவை, ஈரோடு, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குடியிருப்புகளை தமிழக முதல்வர் புதனன்று திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ள டக்கிய வீட்டு வசதியினை ஏற் படுத்தி தரும் வகையில், 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 1.9.2021 ஆம் தேதியன்று தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் பெய ரினை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார். குடிசைகளை மாற்றுவது மட்டு மல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத் தையும், வாழ்க்கை தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத் தோடு பெயர் மாற்றம் செய்யப் பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது. அந்த வகையில், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கோவை மாவட்டம், ஐயுடிபி திட்டப்பகுதியில் தரை மற்றும் 5 தளங்களுடன் ரூ.46.44 கோடி செலவில் 528 அடுக்குமாடி குடியிருப்புகள், சூலூர் பகுதி – 3 திட்டப்பகுதியில் தரை மற்றும் 3 தளங்களுடன் ரூ.41.88 கோடி செலவில் 528 அடுக்குமாடி குடியி ருப்புகள், பன்னிர்மடை கிழக்கு திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் ரூ.5.44 கோடி செலவில் 64 அடுக்குமாடி குடியி ருப்புகள் என மொத்தம் ரூ.93.76 கோடி மதிப்பீட்டில் 1120 அடுக்கு மாடி குடியிருப்புகளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத் திலிருந்து காணொலி காட்சி வாயி லாக திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு பணி ஆணைகளையும், மாற்றுத்திறனா ளிகள், திருநங்கைகள் உட்பட 30 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடி யிருப்புகான ஒதுக்கீட்டு ஆணை களையும் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் புதனன்று வழங்கினார். இதில், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், சூலூர் பேரூ ராட்சி தலைவர் தேவி மன்னவன் உள்ட்டோர் பங்கேற்றனர்.
நாமக்கல்
இதேபோன்று, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நாமக்கல் மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 461 பயனாளி களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு களுக்கு ஒதுக்கீடு ஆணை களையும், சுயமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு பணி ஆணைகள் வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சர் மருத்துவர் மா.மதி வேந்தன் 461 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளையும், சுய மாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு பணி ஆணை களையும் வழங்கினார்.
ஈரோடு
இதேபோன்று, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யத்தின் சார்பில் ஈரோடு மாவட் டத்தில் 1176 அடுக்குமாடி குடியி ருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். ஈரோடு மாவட்டம், கண்ணன் கரடு (மைலம்பாடி) திட்டப்பகுதி யில் தரை மற்றும் இரண்டு தளங் களுடன் ரூ.41.02 கோடி செலவில் 492 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதே போல், நேதாஜி நகர் திட்டப்பகுதி யில் தரை மற்றும் இரண்டு தளங் களுடன் ரூ.17.70 கோடி செலவில் 204 அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நஞ்சை ஊத்துக்குளி திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ. 8.25 கோடி செலவில் 96 அடுக்கு மாடி குடியிருப்புகள், இச்சிப் பாளையம் திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ. 24.76 கோடி செலவில் 276 அடுக்கு மாடி குடியிருப்புகள், குமரன் நகர் திட்டப்பகுதியில் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் ரூ.9.31 கோடி செலவில் 108 அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவ னங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற் றனர். மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணணுண்ணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.