districts

img

மூடப்பட்ட என்டிசி பஞ்சாலைகளை திறந்திடுக

கோவை, டிச.14- 33 மாத காலமாக மூடப்பட்டுள்ள என்டிசி ஆலைகளை ஒன்றிய மோடி அரசு இயக்க வேண்டும். ஊதிய நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோவையில் புதனன்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவ டிக்கைக் குழு முடிவின்படி கோவை தெற்கு  வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஏஐடியுசி பஞ்சாலை சங்க பொதுச்செயலாளர் கே.எம்.செல்வ ராஜ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலா ளர் சி.பத்நாபன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். இதில், எல்பிஎப் வணங்கா முடி, ஐஎன்டியுசி ஆர்.ரங்கநாதன், ஏஐடியுசி முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம், எச்எம்எஸ் டி.எஸ்.ராஜாமணி, சிஐடியு மாவட்ட செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொரு ளாளர் ஆர்.வேலுசாமி, என்டிஎல்எப் ரங்க சாமி, எம்எல்எப் சரவணன், அம்பேத்கர் சங் கம் நீலமேகம், ஏஐசிசிடியு வெங்கடாச்சலம், எஸ்டிடியு முகம்மது ரபீக் உள்ளிட்ட தலை வர்கள் உரையாற்றினர்.  முன்னதாக ஆர்ப்பாட்டத்தில், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தேசிய ஜவுளித் துறைக்கு சொந்தமான என்டிசி பஞ்சாலை களை திட்டமிட்டே இயக்க மறுக்கிறது. இந் திய பொதுத்துறை நிறுவனங்களை ஒவ் வொன்றாக சூறையாடி வருவதுபோல, பல் லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில், வியர்வையில் உருவான என்டி சியின் லட்சக்கணக்கான கோடி ரூபாய் சொத் துக்களை பணமயமாக்கள் திட்டத்தின் கீழ் விற்க முயற்சி செய்கிறது. கடந்த 33 மாத  காலமாக மூடப்பட்டுள்ள என்டிசி ஆலை களை உடனடியாக இயக்கி இதனை நம்பி யுள்ள தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். 31 மாதம் நிலுவையில் உள்ள ஊழி யர்களின் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஆலை இயங்கும் காலம் வரை யில் முழு ஊதியம் வழங்க வேண்டும். என்டிசி பஞ்சாலைகளை நவீனப்படுத்த போதிய நிதி  ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.  முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் என்டிசி பஞ் சாலை தொழிலாளர்கள் ஐநூறுக்கும் மேற் பட்டோர் திரண்டு மோடி அரசிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.