உதகை, மார்ச் 30- ஊட்டியில் கோடை சீசனை முன்னிட்டு குதிரை பந்தயம் நாளை சனியன்று தொடங்கி மே மாதம் 28 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் 550 குதிரைகள் பங்கேற் கின்றன. இந்தியாவில் ஆங்கி லேயர் ஆட்சி செய்தபோது அவர்களின் கோடை வாசஸ் தலமாக ஊட்டி விளங்கியது. ஆங்கிலே யர்கள் பொழுதுபோக்கிற்காக ஊட்டியில் குதிரை பந்தயத்தை நடத்தினர். நூற் றாண்டு பழமை வாய்ந்த இந்த குதிரை பந்தயம் ஆண்டுதோறும் கோடை சீசனை முன்னிட்டு தமிழ்புத்தாண்டில் தொடங்கி ஜூன் மாதம் வரை நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆண்டு தொடர் மழை காரணமாக அனைத்து போட்டிகளும் நடத்த முடியாமல் போனதால் இந்தாண்டு முன் கூட்டியே போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. இதன்படி, இந்த ஆண்டிற்கான குதிரை பந்தயம் நாளை (சனிக்கிழமை) தொடங்கு கிறது. இதற்கான மைதானம் தயார் நிலை யில் உள்ளது. இதுகுறித்து ரேஸ் கிளப் நிர்வாகிகள் கூறு கையில், ஊட்டியில் குதிரை பந்தயம் நாளை (சனிக்கிழமை) தொடங்கி மே மாதம் 28 ஆம் தேதி வரை நடக்கிறது. ஏப்ரல் மாதத்தில் 1, 8, 9, 14, 15, 22,23,29, மற்றும் மே மாதத்தில் 6, 7, 13, 14, 20, 21, 27, 28, ஜூன் என மொத்தம் 17 நாட்கள் நடை பெறும். இதில் முக்கிய குதிரை பந்தயங் களான ஆயிரம் கின்னீஸ் பந்தயம் வருகிற 14 ஆம்தேதியும், 2 ஆயிரம் கின்னீஸ் பந்தயம் வருகிற 15 ஆம்தேதியும் நடக்கும். மேலும், நீலகிரி டர்பி பந்தயம் மே மாதம் 7 ஆம்தேதியும், புகழ்பெற்ற நீலகிரி தங்க கோப்பைக்கான குதிரை பந்தயம் மே 21 ஆம் தேதியும் நடக்கும். இதில் மொத்தம் ரூ. 6.70 கோடி மதிப்பிலான பரிசு தொகைகள் வழங்கப்படுகிறது. இந்த குதிரை பந்தயத்தில் 37 ஜாக்கிகள், 24 பயிற்சியாளர்கள் கலந்து கொள்கின்ற னர். மேலும், மைசூரு, ஆந்திரா, பெங்களூரு, சென்னை, மும்பை ஆகிய இடங்களில் இருந்து இதில் சுமார் 550 குதிரைகள் பங்கேற்கின்றன. கோடை விழாவில் ஒரு பகுதியாக நடக்கும் குதிரை பந்தயம் பல் வேறு தரப்பினருக்கும் மகிழ்ச்சியை ஏற் படுத்தும் என்றனர்.