நாமக்கல், பிப்.16- கோவையிலிருந்து மாற்றப்பட்ட வழக்குகள் இணையதளம் வழியில் விசாரணை மேற்கொள்ளப்படும் என நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றம் தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்ற நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன் றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலு வையில் இருந்து வந்த 50 வழக்கு கள் விரைவான விசாரணைக்காக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் விசாரணை நேர டியாகவும், இணையதள வழியிலும் வேலை நாட்களில் தினமும் மதியம் 02.30 மணிக்கு நடைபெறும். மாறுத லாகி உள்ள வழக்குகளின் முதல் விசாரணை வரும் பிப்.26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. வழக்கு தாக்கல் செய்தவர்களும், எதிர் தரப்பினர்களும், அவர்களது வழக்கறிஞர்களும் தவறாது முத லாவது விசாரணையில் ஆஜராகு மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாறுதலாகி உள்ள வழக்குகளை மூன்று மாத காலத்துக்குள் தீர்வு காண மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளதால், வழக்கின் தரப்பினர்கள் ஒத்துழைக் குமாறு வேண்டப்படுகிறது. இதேபோலவே, கடந்த 9 மாத காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் 10 ஆண்டுகள் வரையும் நிலு வையில் இருந்த வழக்குகள் முடிக் கப்பட்டுவிட்டன. கடந்த 2022 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் தாக் கல் செய்யப்பட்ட வழக்குகளில் 26 வழக்குகள் மட்டும் நிலுவையில் உள் ளன. இவற்றில் வரும் மார்ச் மாதத் திற்குள் தீர்வு காண வழக்கு தாக்கல் செய்தவர்களும், எதிர்தரப்பினர் களும், அவர்களது வழக்கறிஞர்க ளும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதனிடையே, 2023 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப் பட்ட 40 வழக்குகளில் 112 நபர்க ளுக்கு வரும் பிப்.21 ஆம் தேதி நடை பெற உள்ள சமரச பேச்சுவார்த் தைக்கு நுகர்வோர் நீதிமன்றம் அறி விப்பு அனுப்பியுள்ளது. கோவையி லிருந்து விரைவான விசாரணைக் காக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட 84 வழக்குகளை, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் விசாரித்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத் தக்கது.