சேலம், மார்ச் 24 - ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய, தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள மசோதாவிற்கு ஆளுநரே உடனடியாக ஒப்பு தல் வழங்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன் லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கா மல் திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் பொறுப் பற்ற செயலை கண்டித்தும், இரண்டாவது முறையாக தமிழ் நாடு சட்டமன்றம் அனுப்பிய தடை மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கக்கோரியும், இளைஞர்களின் வாழ்க்கையை சீர ழித்து, குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தும் போதை பொருட்களை தடை செய்திட வேண்டும். கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலைகளை குறைத்திட வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வைரமணி தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலா ளர் ஜி.ராணி, மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தேவி, மாநி லக்குழு உறுப்பினர் ஐ.ஞானசௌந்தரி ஆகியோர் உரை யாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் கே. ராஜாத்தி, டி. பரமேஸ்வரி, ஜெயமாலா உள்ளிட்ட திரளானோர் பங்கேற் றனர்.