districts

ஆன்லைன் செயலில் கடன்: கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

நாமக்கல், ஜூன் 10- ஆன்லைனில் கடன் பெற்ற நாமக்கல்லைச் சேர்ந்த கல்லூரி  மாணவர், தொடர் தொல்லை காரணமாக பயத் தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் தமி ழகத்தையே உலுக்கியது. இதனை யடுத்து, தமிழக அரசு உள்ளிட்டு அரசியல் இயக்கங்க்களின் பெரும் போராட்டத்திற்கு பிறகு, வேறு வழி யின்றி தமிழக ஆளுநர் இந்த விளை யாட்டை தடைசெய்யும் தமிழக அர சின் இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித் தார். இந்நிலையில், தற்போது, ஆன் லைனில் எளிதாக ஆசை காட்டி  கடன் கொடுப்பதும், பின்னர், செல் போனில் உள்ள அனைத்து எண் களை கைப்பற்றி, கடன் பெற்ற வர்கள் குறித்து மிக அவதூறாக வும், ஆபாசமாகவும் சித்தரித்து மன உளைச்சலை ஏற்படுத்தும் செயல் தற்போது அதிகரித்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக, பல்வேறு  இடங்களில் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது. இதன்தொடர்ச் சியாக, நாமக்கல்லில் மாணவர் ஒரு வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. நாமக்கல்லை அடுத்த சேந்த மங்கலம் சாலை, செல்லப்பா கால னியில் உள்ள கீழ் காலனியை சேர்ந் தவர் லோகேஷ்வரன் (22). கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல் லூரியில் இறுதியாண்டு படிப்பை முடித்து விட்டு, தேர்வு முடிவுக்காக காத்துக்கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில், லோகேஷ்வரன் ஆன்லைன் செயலி மூலம் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப் படுகிறது. தவணை தேதி முடிந்த தால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதற்காக லோகேஷ்வரனை ஆன்லைன் கடன் நிறுவன நிர் வாகிகள் தொடர்பு கொண்டுள்ள னர். ஆனால், அவர் பணத்தை கொடுக்க இயலாத நிலையை தெரி வித்துள்ளார். இதனையடுத்து இந் நிறுவனம், லோகேஷ்வரனின் பெற் றோரை தொடர்பு கொண்டு பணத்தை கேட்டுள்ளனர். இதன்பின் தான் ஆன்லைனில் கடன் வாங்கியது பெற்றோருக்கு தெரிந்து போன தையடுத்து, மனமுடைந்த லோகேஷ் வரன், வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள் ளார். இதனைக்கண்ட அக்கம் பக் கத்தினர் லோகேஷ்வரனை மீட்டு நாமக்கல்  தலைமை அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ள னர். இதுகுறித்து தகவலறிந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம னைக்கு வந்த நாமக்கல் போலீ சார் உடலை கைப்பற்றி மீட்டு பரி சோதனைக்கு அனுப்பி வைத்த தோடு, வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.