கோவை, ஜன.6- வெங்காயத்தின் வரத்து அதிகரிப்பு கார ணமாக, விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை மாவட்டங் களில் சின்ன வெங்காயம் அதிகளவில் பயிரி டப்படுகிறது. கோவை மாவட்டத்தில் தொண் டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. கோவை யில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளுக்கு உள்ளூர் வரத்துடன், மைசூர் உள்ளிட்ட கர்நா டக மாநில பகுதிகளில் இருந்தும் வரத்து இருக்கும். கோவைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 400 டன் பெரிய வெங்காயமும், சுமார் 100 டன் சின்ன வெங்காயமும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தபோது, அதனுடன் சேர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.200 வரை விற்பனையானது. கடந்த டிசம்பர் முதல் வாரம் வரையிலும் கூட கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை யில் கடந்த சில நாட்களாக தொடர் சரிவு ஏற் பட்டுள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங் காயம், தற்போது ரூ.35-க்கு விற்பனை செய் யப்படுகிறது. ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை யில் சின்னவெங்காயத்தின் விலை ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.35-க்கும், அதிகபட்சம் ரூ. 38-க்கும் விற்பனையானது. அதேபோல் சரிவை சந்தித்து வரும் பெரிய வெங்காயமும் குறைந்தபட்சம் ரூ.25-க்கும், அதிகபட்சம் ரூ. 29-க்கும் விற்பனையானது. கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையா னது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வரத்து அதிகரித்து இருப்பதால் வெங்கா யத்தின் விலையில் சரிவு ஏற்பட்டு வருவ தாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ள னர். சின்ன வெங்காயத்தின் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.