districts

img

தேனீ வளர்ப்புப் பயிற்சி முகாம்

கோபி, மே 20- கோபி அருகே உலக தேனீக்கள் தினத்தையொட்டி தேனீ வளர்ப்புப் பயிற்சி முகாமில் தேனீ வளர்ப்பு குறித்த  பாடத்தை அறிமுகபடுத்தி தேனீ வளர்ப்பு குறித்து மாணவர்களை ஊக் கப்படுத்த வேண்டும் என தேனீ வளர்ப்பு  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப் பாளையம் அருகே உள்ள பெருமுகை யில் உலக தேனீக்கள் தினத்தை முன் னிட்டு தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சி முகா மில் மனித வாழ்வியலில் முக்கிய பங்கு  வகிப்பது இன்றைய தலைமுறையி னரிடையே தேனீ வளர்ப்பு குறித்து உலக தேனீக்கள் தினத்தில் பெண்கள்,  விவசாயிகள் மற்றும் கல்லூரி மாணவ , மாணவிகளிடையே தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி முகாம் மற்றும் கருத்த ரங்கம் நடைபெற்றது. இம்முகாமில், பெருமுகை பகு தியை சேர்ந்த விவசாயி கதிர்வேல் தேனீ  வளர்ப்பு குறித்தும் தேனீக்களை எவ் வாறு கையாள்வது ஆண்பூச்சி, இராணி  தேனீ, மற்றும் வேலைக்கார தேனீ பூச்சி யின் பங்குகள் குறித்து விவசாயிக ளுக்கும் கல்லூரி மாணவ மாணவிக ளுக்கும் செயல்முறை விளக்கம் அளித் தார்.  இதனைதொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் வேளாண் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி அழகேசன், வேளாண் உழவியல் அறிஞர் சரவணன்  கலந்து கொண்டு தேனீ வளர்ப்பின் முக் கியத்துவம், தேன் மற்றும் தேனீக்க ளின் மெழுகு பொருட்களை எவ்வாறு  சந்தை படுத்துதல் விவசாயிகளுக்கும் தனிநபர் பெண்களுக்கும் தேனீ வளர்ப்பு மூலம் வருமானம் ஈட்டி லாபம் அடைவதற்க்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார். அப்போது அந் தியூர் பர்கூர் மலை பகுதியில் கடந்த  20 ஆண்டுகளுக்கு முன் 2 ஆயிரம் கிலோ வரை தேன் உற்பத்தி செய்து வந்தனர்.  தற்போது கடந்த சில வருடங்களாக தேன் உற்பத்தி 200 கிலோ கூட கிடைப் பதில்லை. மலைபகுதியில் தேனீ வளர்ப்பு மற்றும் தேன் உற்பத்திக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வருங்காலங்களில் மாணவர்களும் தேனீ வளர்ப்பில் பங்கு  வகிக்க வேண்டும் என சிறப்புரை நிகழ்த் தினார். பின்னர் தேனீ வளர்ப்பு குறித்து  பயிற்சி அளித்த விவசாயி கதிர்வேல்  கூறுகையில், மனித வாழ்வுக்கு முக்கிய  பங்கு வகிப்பது தேனீக்கள் அரசு பள்ளி களில் தேனீ வளர்ப்பு குறித்து பாடத்திட் டத்தை அறிமுகப்படுத்தி மாணவ, மாண விகள் இளம் வயதிலேயே தேனீ வளர்ப்பு சுயதொழிலை கற்றுகொள்ள அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும் தேனீ வளர்ப்பு குறித்து மாணவர்க ளுக்கு பயிற்சி வழங்க ஏராளமான விவ சாயிகள் தயாராக உள்ளதாகவும் கோரிக்கை விடுத்துள்ளார்.