districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 8 ஆண்டு சிறை

உதகை,நவ.20- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகளிர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் வசித்து வருபவர் முஸ் தபா(60). இவர், தனது பக்கத்து வீட்டில் இருந்த சிறுமிக்கு  பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை  தனது தாயிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதனைத்தொ டர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு உதகையில் உள்ள மகளிர்  காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள்  புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் முஸ்தபாவை போலீ சார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத் தனர். இது தொடர்பான வழக்கு உதகையில் நீதிமன்றத் தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த நிலை யில், முஸ்தபாவிற்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.7  ஆயிரத்து 500 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 

பெண் மீது தாக்குதல்

கோவை, நவ.20- பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் மளிகைக்க டைக்கார பெண் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை சங்கனூர் கணபதி பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவரது மனைவி சாந்தி(36). இவர்கள் வீட்டின்  முன்பு மளிகை கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பணம், கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் இவர்களது வீட்ட ருகே வசிக்கும் மேகலா(48) என்பவருக்கும், சாந்திக்கும் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை இது தொடர்பாக மீண்டும் தக ராறு எழுந்ததாக தெரிகிறது. அப்போது மேகலாவின் சகோ தரர் பாக்கியராஜ், தகாத வார்த்தைகளால் பேசி சாந்தியை  தாக்கியதாகவும்,  பதிலுக்கு சாந்தியின் கணவர் கிறிஸ் டோபர், அவரது நண்பர்கள் மதன், ராஜசேகர் ஆகியோர்  சேர்ந்து பாக்கியராஜ் மற்றும் மேகலாவை தாக்கியதாகவும் தெரிகிறது. இது குறித்து இரு தரப்பிலும் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீ சார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பாக்கிய ராஜ், கிறிஸ்டோபர், ராஜசேகர், மதன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சேலம்: மாநில க்யூவாக்கிடோ போட்டி

சேலம், நவ.20- மாநில அளவிலான க்யூவாக்கிடோ போட்டியில் சேலம்  மாணவர்கள் பதக்கங்களை குவித்து சாதனை படைத்தனர். 5 ஆவது மாநில அளவிலான க்யூவாக்கிடோ போட்டி திருச்சி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் நடை பெற்றது. இதில் சேலம், நாமக்கல் உட்பட 25க்கும் மேற்பட்ட  மாவட்டங்களிலிருந்து ஐந்து வயது முதல் 17 வயதிற்கு மேற்பட்ட 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து  கொண்டனர். இப்போட்டியில் சேலம் மாவட்டத்தில் இருந்து 37 பேர் கலந்து கொண்டனர். இதில் 20 தங்கம், 10  வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களை வென்று மாநிலத் தில் இரண்டாம் இடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம்  வென்றனர். இவர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற  உறுப்பினருமான ஆர்.ராஜேந்திரன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது சேலம் மாவட்ட கியூவாக் கிடோ சங்க செயலாளரும், அரசு வழக்கறிஞருமான வஸ்தாத்  கிருஷ்ணன், துரைராஜ், அலிஜான், அகில இந்திய வழக்க றிஞர் சங்க சேலம் மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.

“ஈரோடு வாசிக்கிறது” நிகழ்வு

ஈரோடு, நவ. 20- ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பூங்காவில் ‘ஈரோடு வாசிக்கிறது” என்ற தலைப்பிலான புத்தகம் வாசிப்பு நடைபெற்று வருகிறது. வாரந்தோறும் ஞாயிறன்று காலை 9 மணி முதல் பகல் 12  மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பூங்காவில் “ஈரோடு வாசிக்கிறது” என்ற வாசிப்பு இயக்கம் கடந்த 12 வாரங்களாக நடைபெற்று வரு கிறது. இதில் புத்தக வாசிப்பாளர்கள் பங்கேற்று புத்தக வாசிப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.

அலுவலக பூட்டை உடைத்து திருட்டு

கோவை, நவ.20- கோவை கே.கே.புதூர் சாயிபாபா காலனியில், தனியார்  நிறுவன அலுவலகத்தில், கிணத்துக்கடவு அண்ணாநகரைச் சேர்ந்த நிரஞ்சன்(24) மேலாளராக உள்ளார். இவர் சனிக்கிழ மையன்று இரவு அலுவலக பணிகளை முடித்துவிட்டு, கதவை  பூட்டி விட்டு சென்றுள்ளார்.  இதனையடுத்து அடுத்தநாள் காலையில் ஊழியர் லோகேஷ் அலுவலகத்தை திறக்க சென்ற போது, அலுவலகத் தின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உடனே அவர் மேலாளர்  நிரஞ்சனுக்கு தகவல் கொடுத்தார். அவர் சென்று பார்த்த போது அங்கு கல்லாவில் இருந்த 40 ஆயிரம் பணத்தை அடை யாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நிரஞ்சன் இது  குறித்து சாயிபாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித் தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி  கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.

சேலம் புத்தகத் திருவிழா இன்று துவக்கம்

சேலம், நவ.20- சேலம் மாநகராட்சி திடலில் நடைபெற உள்ள புத்தகத் திரு விழாவை, அமைச்சர் கே.என்.நேரு செவ்வாயன்று துவக்கி  வைக்கிறார். தமிழ்நாடு அரசு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரிடமும் வாசிப் புப் பழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும், மாவட்டங்க ளில் புதிய நூலகங்கள் அமைத்தல், அனைத்து மாவட்டங்களி லும் புத்தகத் திருவிழா நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகை யில், சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேலம் புத்தகத் திருவிழா-2023 செவ்வாயன்று துவங்க உள்ளது. இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைக்கிறார். டிச.3 ஆம் தேதியன்று வரை சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில்  நடைபெறவுள்ளது. இப்புத்தகக் கண்காட்சியில் பள்ளி,  கல்லூரி மாணவ. மாணவிகள் பங்கேற்றுப் பயன்பெற வும், பள்ளிகளில் பயிலும் மாணவர்களை புத்தகக் கண்காட்சி  நடைபெறும் இடத்திற்கு அழைத்து வந்து பார்வையிட  ஏற்பாடுகளைச் செய்திடவும், மாணவ, மாணவிகளுக்கி டையே கலை மற்றும் இலக்கியம் நிகழ்ச்சிகள் நடத்திடவும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்களின் கருத்தரங்கு நிகழ்ச்சி, அனைத்து நாள்களிலும் நடை பெற உள்ளன. 250க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட் டுள்ளன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட நிர் வாகத்தினர், உயரதிகாரிகள் செய்து வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியரகத்தில்  தீக்குளிக்க முயன்ற மூதாட்டி

திருப்பூர், நவ. 20 - திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சொத்து பிரச்சனை தொடர்பாக மனு அளிக்க வந்த மூதாட்டி தனது  மகனுடன் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற் பட்டது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அருக்காணி, அவரது அக்கா மாரத்தாள் ஆகியோருக்கு திருப்பூர் மாவட்டம் முத்து  கவுண்டம்பாளையத்தில் 5.30 ஏக்கர் நிலம் பூர்வீக சொத்து  உள்ளது. இருவருக்கும் பாகப்பிரிவினை செய்யப்பட்டு 2.75  ஏக்கர் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் மாராத்தாள் மற்றும் அவரது மகன் குப்புசாமி ஆகியோர் அருக்கானிக்கு சேர  வேண்டிய 2.75 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துக்  கொண்டிருப்பதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் பல முறை மனு அளித்தும், இப்பிரச்ச னையைத் தீர்த்து வைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அருக்காணி குற்றம்சாட்டி திங்களன்று மனு அளிக்க வந்தார். அப்போது அவரும், அவரது மகன்  குப்புசாமியும் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தங்கள் உடலில்  மன்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.   அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவ லர்கள் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள்  மீது தண்ணீர் ஊற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்ற னர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் அமர நூறு இருக்கைகள்

திருப்பூர், நவ.20- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரை தளத்தில் பொதுமக்கள் அமர்வதற்கு சுமார் நூறு இருக்கை கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் மற்றும் வயதானவர்கள், ஊனமுற்றோர்கள் மற்றும்  உடல் நலம் குறைவாக உள்ளவர்கள் பல்வேறு பணிகளுக் காக வரும்போது இருக்கை வசதி இல்லாமல் நெடுநேரம் நின்று கொண்டு இருக்க வேண்டி உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் உடனடி  நடவடிக்கை மேற்கொண்டதால், தரை தளத்தில் சுமார் 100 இருக் கைகள் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு  வரப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உள்ள மாற்றுத்திறனாளி அலுவலகம், ஆதார் மையம், பொது சேவை மையம், முதல மைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அலுவலகம், வாக் காளர்கள் சேவை மையம், வங்கிகள், தபால் அலுவலகம், மக் கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கு போன்ற சேவை  மையங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு பயனளிக்கும்  வகையில் செய்யப்பட்டுள்ளது.

வாரணாசிபாளையத்தில் துணை சுகாதார நிலையம்

திருப்பூர், நவ. 20 – திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், காளிபாளையம் ஊராட் சிக்கு உட்பட்ட வாரணாசிபாளையத்தில் 15ஆவது மத்திய  நிதிக்குழு நிதி மற்றும் ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.47.31  லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு துணை சுகாதார நிலையம்  அமைக்கும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ்  துவக்கி வைத்தார்.  இந்நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் ரத்தினாம்பாள் சிவ சாமி, பெருமாநல்லூர் ஊராட்சிமன்ற துணை தலைவர் சி.டி. சி.வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வாகனப் பேரணி: அமைச்சர் வரவேற்பு

தாராபுரம், நவ.20- தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக  இளைஞரணி சார்பில் நடைபெற்று வரும் வாகனப் பேரணி ஞாயிற்றுக்கிழமை தாராபுரம் வந்தடைந்தது. அதை ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல் விழி செல்வராஜ் வரவேற்றார். தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக  இளைஞரணி சார்பில் 50 லட்சம் கையெழுத்து பெரும் இயக் கம் நடைபெற்று வருகிறது. அதே கோரிக்கையை வலியு றுத்தி வரும் டிச.17 ஆம் தேதி சேலத்தில் இளைஞரணி  மாநாடு நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக நடைபெற்று  வரும் இருசக்கர வாகனப் பேரணி தாராபுரம் வந்தடைந்தது.  அதை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்  என்.கயல்விழி  செல்வராஜ் வரவேற்றார். இதில், தாராபுரம் ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்கு மார், நகரச் செயலாளர் எஸ்.முருகானந்தம், மாவட்ட துணைச்  செயலாளர் பிரபாவதி பெரியசாமி, மாவட்ட இளைஞர் அணி  அமைப்பாளர் ஜெயக்குமார், துணை அமைப்பாளர் ஆரோன்  செல்வராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன்பாலு,  நகர அவைத் தலைவர் கதிரவன், தகவல் தொழில்நுட்ப அணி  மாவட்டத் துணை அமைப்பாளர் ஹைடெக் அன்பழகன், நக ராட்சி உறுப்பினர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண் டனர்.

வாகனங்களுக்கு ஆயுட்கால வரியை ரத்து செய்ய திருப்பூரில் வாடகை ஓட்டுநர்கள் கோரிக்கை மனு

திருப்பூர், நவ. 20 - வாடகை வாகனங்களுக்கு ஆயுட்கால  வரி கேட்பது இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர் களை நசுக்குவதாக உள்ளது. எனவே இந்த  வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தென் னிந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும்  உரிமையாளர்கள் நல சங்கம் கோரியுள் ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் திங்களன்று தென்னிந்திய சுற்றுலா  வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் கள் நலச்சங்கத்தினர் அளித்த கோரிக்கை  மனுவில் கூறியிருப்பதாவது:  தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான சுற்றுலா வாகன ஓட்டுநர்களும், உரிமையா ளர்களும் சுற்றுலா வாகனங்களை வைத்துக் கொண்டு வாடகைக்கு இயக்கி பிழைப்பு நடத்தி வருகின்றோம். நாங்கள் ஏற்கனவே  டீசல் விலை, சுங்கக் கட்டணம், உதிரிபாகங் கள் விலைஉயர்வு போன்றவற்றால் மிகவும்  பாதிப்படைந்து உள்ளோம். இந்த சூழ்நிலை யில் எங்களது வாகனங்களுக்கு பல ஆண்டு களாக காலாண்டு வரி செலுத்தி வந்தோம், இப்பொழுது, திடீரென்று வாழ்நாள் வரி கேட் பது எங்களை நசுக்குவதாக உள்ளது. எனவே  தமிழக அரசு தற்போது நடைமுறைப்படுத் தியுள்ள ஆயுட்கால வரி செலுத்தும் முறை  என்பது, எங்கள் மோட்டார் தொழிலாளர்க ளையும், மோட்டார் உரிமையாளர்களையும் மிகவும் கடுமையாக பாதிக்கும் வகையில்  உள்ளது. இந்த வரி விதிப்பு என்பது ஏற்கனவே  பத்து ஆண்டுகள், ஐந்தாண்டுகள் பழைய வாகனங்களுக்கும் மீண்டும் நாங்கள் ஆயுட் கால வரி செலுத்துவது என்பது இயலாத ஒன் றாகும், அது எங்கள் தொழில், வாழ்வாதா ரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் எங்கள் குடும்பமும், குடும்ப வாழ் வாதாரமும் பெரிய அளவில் பாதிப்பை சந்திக் கும் அபாயம் உள்ளது. ஆகவே பழைய வாக னங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுட்கால வரியை உடனடியாக ரத்து செய்து எங்களு டைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண் டும் என்று கேட்டுக் கொள்வதாக அந்த மனு வில் கூறப்பட்டுள்ளது.

கல் குவாரியில் பதுக்கிய வெடி மருந்து வெடித்து விபத்து?

திருப்பூர், நவ. 20 – அனுமதி காலம் முடிந்து ஒரு மாதத்திற்கு  மேலாக இயக்கப்பட்டு வந்த தனியார் கல்கு வாரியில் பதுக்கி வைத்திருந்த வெடிமருந்து  வெடித்து காங்கிரீட் கட்டிடம் தரைமட்டமான துடன், சுற்றிலும் பாதிப்பு ஏற்படுத்தியதாக சட் டவிரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர்  குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வெடி மருந்து வெடிப்பினால் சூலூர்  விமானப்படை மையத்திலும் பாதிப்பு ஏற்பட் டிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் தெரி வித்துள்ளனர்.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கோடங்கிபாளையம் கிராமத்தில் புல எண்:  116 விஜயலட்சுமி கல்குவாரி அனுமதி காலம்  முடிந்துவிட்டது. அதன் பின்பு ஒரு மாதத் திற்கு மேலாக அந்த குவாரி இயங்கி வந்த தும், அங்கு சட்ட விரோதமாக வெடி மருந்தை  வைத்திருந்து வெடித்து, பலர் படுகாயம் அடையவும், பல வீடுகள் படுசேதம் அடைய வும் காரணமாக இருந்தது. எனவே இந்த கல் குவாரியை இயக்கிவந்த குவாரி உரிமை யாளர்களை கைது செய்வதுடன், அந்த கல்கு வாரி இயங்க அனுமதித்த, கிராம நிர்வாக  அலுவலர் உள்ளிட்ட அனைத்து அதிகாரி களையும் கைது செய்ய வேண்டும என்றும்  சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத் தினர் வலியுறுத்தி உள்ளனர். கடந்த 15ஆம் தேதி மாலை சுமார் 5 மணி யளவில் கடும் சத்தத்துடன் வெடித்ததால் அங் கிருந்த காங்கிரீட் கட்டிடம் தரைமட்டமானது.  மேலும் சுமார் 3 கி.மீ முதல் 5 கி.மீ வரை நில அதிர்வு ஏற்படுத்தியது. எனவே பல கட்டிடங்க ளில் விரிசல்கள், ஜன்னல் கண்ணாடி உடைப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலி ருந்து பதற்றத்தில் வெளியேறி உள்ளனர். வாகனத்தில் சென்றவர்கள் சிறிது நேரம் என்ன நடக்கிறது என்று புரியாமல் திகைத்து  வாகனத்தை நிறுத்திவிட்டு பிறகு சென்றனர்.  இந்த நிகழ்வில் தற்போது அதிர்ச்சிகரமான செய்தியாக அருகில் 2.5 கி.மீ தொலைவில் உள்ள இந்திய விமானப்படைக்கு சொந்த மான சூலூர் விமான மையத்தில் பாதிப்பு ஏற் பட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது  தொடர்பாக விசாரணை முடுக்கிவிடப்படுமா,  சட்டவிரோத வெடி மருந்து நடமாட்டம் தடை  செய்யப்படுமா என்றும் சட்டவிரோத கல்கு வாரி எதிர்ப்பு இயக்கத்தினர் கேள்வி எழுப்பி யுள்ளனர்.

வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கிளை திறப்பு

நாமக்கல், நவ.20- ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற் பனை சங்கத்தின் நாமகிரிப்பேட்டை கிளையினை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்களன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நாமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டையில் 3.26 கோடி ரூபாய் செலவில் 500 மெட்ரிக் டன் கிடங்கு, மஞ்சள் தரம் பிரிப்பு மற்றும் மதிப்பீட்டுக் கூடம், மஞ்சள் தரம் பிரிக்கும் இயந்திரம், ஏலக்களம் என முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக வனத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பி னர், கே.ஆர்.என்.இராஜேஷ்குமார் மற்றும் மாவட்ட ஆட்சி யர் எஸ்.உமா, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன் னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், ரூ.35.41 லட்சம் மதிப்பிலான பயிர் கடன் மற்றும் 25 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன்கள் வழங்கப்பட்டது.

அடிப்படை வசதிகள் கேட்டு ஆட்சியரிடம் மனு

சேலம், நவ.20- குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வச திகள் செய்து தர வேண்டும் என வலியு றுத்தி பொதுமக்கள் சேலம் ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா, பாகல் பட்டி கிராமம் அருகே அமைந்துள்ளது ஓம்  சக்தி நகர். இப்பகுதியை சேர்ந்த பொதுமக் கள் திங்களன்று சேலம் ஆட்சியர் அலுவல கத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் பகுதியில் சுமார் 650 வீடுகள் உள்ளன. எங்கள் குடியிருப்பு பகுதிக்கு இதுவரை மேட் டூர் காவிரி குடிநீர் வசதி என்பது இல்லாததால்,  நாங்கள் பஞ்சாயத்து ஆழ்துளை தண்ணீரை தான் குடிப்பதற்கும், மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகிறோம். எங்கள் பகுதியை சுற்றியுள்ள கிராமமான மாரமங்கலத் துப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, பூமிநாயக் கன்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, மஜ்ரா  கொல்லப்பட்டி, செங்கானூர், தோளூர் ஆகிய பகுதிகளுக்கெல்லாம் மேட்டூர் காவிரி குடி நீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்கள் குடியிருப்பு பகுதிக்கு மட்டும் மேட்டூர் காவிரி குடிநீர் இணைப்பு கொடுக் கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை கிராம சபை கூட்டத்திலும், ஊராட்சி மன்ற தலைவ ரையும், துணைத்தலைவர் ஊராட்சி அதிகாரி களிடம் தெரிவித்து கடிதம் கொடுத்தோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. மேலும், எங்கள் பகுதியில் சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக மிகவும்  மோசமான நிலையில் உள்ளன. எனவே குடி நீர் வசதி, சாலை வசதி ஆகியவற்றை விரை வாக மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பணை ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

தருமபுரி, நவ.20- தடுப்பணை நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி நெற்பயிர்களுடன் விவ சாயிகள் தருமபுரி ஆட்சியரிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேவுள்ள புதுப் பட்டி வருகூரான் கொட்டாய் கிராமத்தில் ஏரி நிரம்பி தண்ணீர்  வெளியேறி செல்லும் வழியில் தடுப்பணை ஒன்று உள்ளது.  மழை காலங்களில் அந்த தடுப்பணை நிரம்பும் போது, சுற்று வட்டார பகுதி விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருந்தது. தடுப்பணை மூலம் சுற்றுப்பகுதிகளிலுள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து வந்தது. இந்நிலையில், அதே ஊரைச்  சேர்ந்த ஒருவர், தனிபட்ட சுய லாபத்திற்காக தடுப்பணையை உடைத்து சேதபடுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளார். தடுப் பனை நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பால் விவசாயம் அடி யோடு அழிந்து, நீர் ஆதாரமும் கேள்வி குறியாகிவிட்டது. எனவே, தடுப்பணை மற்றும் தடுப்பணை கால்வாய்களை உடைத்து, ஆக்கிரத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். விவசாயிகள் பயன்பெறும் வகையில், மீண்டும் தடுப்ப ணையினை கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி தண்ணீ ரின்றி வாடி வரும் நெற்பயிர்களுடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளித்தனர்.

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

கோவை, நவ.20- கோவை, ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (20). இவ ருக்கும் சௌரிபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவ னுக்கும். இன்ஸ்டாகிராம் மூலம் பழகுவதில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில். ஞாயி றன்று ரவி மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் 8 பேர் கும்பலாக சேர்ந்து ராமநாதபுரம் வள்ளியம்மாள் தெருவில் உள்ள பூங்கா முன்பு ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். இதில், ராமநாதபுரம் சர்ச் தெருவை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் பால சுந்தரமூர்த்தி(22) என்ற வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் கையில் காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 ஆண்டுகளாக பட்டா வழங்கவில்லை மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி

சேலம், நவ.20- கடந்த நான்கு ஆண்டுகளாக பட்டா வழங் காத நிர்வாகத்தை கண்டித்து, மாற்றுத்திற னாளி ஒருவர் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே  உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் மாற் றுத்திறனாளியான முனுசாமி. இவர் தனது மனைவி வீரம்மாள் உடன், திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த னர். அப்போது மறைத்து வைத்திருந்த மண் ணெண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்றி, இருவரும் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றனர். இதைய டுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தி, உட லில் நீரை ஊற்றி சமாதான பேச்சுவார்த் தைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து முனுசாமி கூறுகையில், எங்களுக்கு சொந் தமாக 75 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத் திற்கு பட்டா கேட்டு மேட்டூர் வருவாய் அலு வலகத்திலும், வட்டாட்சியர் அலுவலகத்தி லும் மனு அளித்தோம். கடந்த நான்காண்டு காலமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கா மல், மெத்தனப்போக்குடன் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கேட் டதற்கு, எங்கள் நிலத்திற்கு அருகே உள்ள  நபர், பட்டா வழங்கக்கூடாது எனக்கூறி வருவ தாக தெரிவிக்கின்றனர். பட்டா வழங்காததால் எங்களால் ஒன்றும்  செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளோம். எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பட்டா வழங்கக்கூடாது என கூறி வரும் நபர் மீது நடவடிக்கை எடுத்து, பட்டா  வழங்க வேண்டும், என்றார். இதைத்தொ டர்ந்து காவல் துறையினர் இருவரையும் சேலம் நகர காவல் நிலையத்திற்கு அழைத் துச் சென்று, தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.