மேட்டுப்பாளையம், செப்.12- காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், கட் டுமான பணிகள் நான்கு மாதங்களாக முடங்கியுள்ளது குறித்து நடவ டிக்கை எடுக்காத அதிகாரிகளை தொலைபேசியில் அழைத்து கடிந்து கொண்டார். குன்னூர் நிகழ்ச்சி ஒன்றில் பங் கேற்க தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மேட்டுப்பாளையம் வழி யாக மா.சுப்பிரமணியன் செவ்வா யன்று மாலை சென்று கொண்டிருந் தார். அப்போது காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் நுழைந்து திடீர் ஆய்வு மேற்கொண் டார். தகவல் ஏதுமின்றி திடீரென உள்ளே வந்த அமைச்சர், ஆரம்ப சுகாதார வளாகத்தில் உள்ள ஒவ் வொரு பகுதிக்கும், சென்று ஆய்வு செய்தார். அப்போது, சித்த மருத்து வர் பணியில் இல்லாமல் இருந்த நிலையில், அதுகுறித்து அமைச்சர் கேள்வி எழுப்பினார். அவர் விடுப் பில் இருப்பதாக அமைச்சரிடம் தலைமை மருத்துவர் தெரிவித்தார். இதனையடுத்து மருத்துவமனை வளா கத்தில் நடைபெற்று வரும் செவிலி யர் தங்கும் விடுதி மற்றும் இதர கட்டு மான பணிகள் குறித்து அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப் போது பணிகள் துவங்கி நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை ஆரம்ப நிலையிலேயே உள்ளது குறித்து தெரிந்து கொண்டு தொடர்புடைய அதிகாரிகளை அமைச்சர் தொலை பேசி வாயிலாக அழைத்து பேசி னார். அப்போது, “முறையாக பணிகள் மேற்கொள்ளாத நபருக்கு ஏன் இரண்டு கட்டுமான கான்டிராக்ட் வழங்கி அனு மதி அளித்தீர்கள்? கடைசியாக எப் போது இங்கு வந்து நேரில் பணிகளை ஆய்வு செய்தீர்கள்” என அடுக்கடுக் கான கேள்வி கேட்டார். இதனைய டுத்து, கோவை மாவட்ட ஆட்சியரி டம் பேசி பணியில் சுணக்கம் காட்டும் பழைய ஒப்பந்ததாரரை விடுவித்து விட்டு, புதிய நபர்களிடம் பணியினை வழங்கி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுறுத்தினார்.