உடுமலை, பிப்.18- உடுமலை பகுதியில் சட்ட விரோத கிராவல் மண் கடத்தலை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் பொது மக்கள் பயன்படுத்தும் பல சாலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொது மக் கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் தற்பொழுது எந்த வித சட்ட விதிகளையும் மதிக்காமல் கிராவல் மண் கொள்ளை என்பது இரவு, பகல் பாராமல் நடைபெற்று வருகிறது. இப் படி கனரக வாகனங்களைப் பயன்ப டுத்தி மண் எடுத்துக் கொண்டு பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்ப டுத்தி வரும் சாலைகளை மண் மேடாக மாற்றி வருகிறார்கள். இந்த கனரக வாக னங்களை அதிகமாக வெளி மாநில ஓட்டு நர்கள் ஓட்டுவதால் அவர்களுக்கு இப்ப குதியில் உள்ள சாலைகள் எங்கு செல்கி றது என்றும், பொது மக்கள் அதிகமாக வரும் பள்ளி மற்றும் கோவில் பகுதிக ளில் வாகன விதிகளை கடைப்பிடிப்பது இல்லை.
இதனால் பல விபத்துகள் ஏற்பட்டு உள்ளது. இவற்றை எல்லாம் ஆய்வு செய்ய வேண்டிய வட்டார போக்குவரத்து ஆய்வாளர் இந்த வாகனங்களை ஒரு நாள் கூட ஆய்வு செய்யவில்லை. போக்குவரத்தை சரி செய்ய வேண்டிய காவல்துறையினர் விளை பொருள்கள் கொண்டு செல் லும் விவசாயிகளிடம் சட்ட விதிகளை காரணம் காட்டி பணம் பறித்து வரு கிறார்கள். இந்த கனரக வாகனங்கள் மக் கள் பயன்படுத்தும் சாலைகளை மட்டும் சேதப்படுத்தவில்லை. தற்பொழுது, பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான வாய்க்கால் கரைகளிலும் வாகனங்கள் செல்வதால் வாய்க்கால் கரைகள் பல இடங்களில் உடைந்து காணப்படுகிறது. பொது மக்களை பாதிக்கும் வகையில் தொடர் கிராவல் மண் எடுக்கும் கனரக வாகனங்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேண்டிய வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் வட்டார போக்கு வரத்து துறை அதிகாரிகள் கண்டு கொள் ளாமல் இருப்பது ஏன் என்று தெரிய வில்லை. இதில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.