சேலம், நவ.15- பொதுமக்கள் குடியிருக்கும் இடத்தை வண்டித்தடமாக கணக்கிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, மீண்டும் அதேபகுதியில் பொதுமக்களை குடியிருக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிட்டனர். சேலம் மாவட்டம், சன்னியாசி குண்டு, ராமசாமி நகரில் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நபர்கள் கடந்த 75 வருடங்களாக வசித்து வருகின்றனர். இந் நிலையில், சேலம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் பொதுமக்கள் குடியிருந்து வரும் நிலம் வண்டிப்பாதை என அரசு பதி வேட்டில் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் வீடு களை காலி செய்ய வேண்டும் என்று பொதுமக்களுக்கு உத்த ரவு நகல் வழங்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து அப் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விடு தலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர பொருளாளர் காஜா மைதீன் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டனர். மேலும், அதேபகுதியில் குடியி ருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 75 வருடங்களாக குடியிருந்து மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர்.