உடுமலை, அக்.19- ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெறும் லஞ்ச ஊழல் நடவ டிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் தட்டி வைத்த நிலையில், அதனை ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ் சம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகரக்குழு சார்பில் அலுவகத்தின் முன்பாக கடந்த திங்களன்று பிளக்ஸ் தட்டி வைக்கப்பட்டது. இந்த தட்டியை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து உடுமலை நகர கமிட்டியின் சார்பில் காவல்துறையிடம் புகார் தெரிவிக்கபட்டது. பின்னர், இந்த தட்டியை ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் மறைத்து வைத்தி ருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்கை யில், ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளின் பேச்சைக்கேட்டு ஊழி யர்கள் எடுத்து மறைத்து வைத்துள்ளது தெரியவந்தது. இது போன்ற தட்டிகளை கண்டால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் தான் அஞ்ச வேண்டும். மற்றவர்கள் அஞ்ச வேண்டிய அவசி யம் இல்லை. இதனிடையே, சனியன்று, போக்குவரத்து அலு வலகத்தில் உள்ளே இருந்த தட்டியை எடுத்துக்கொண்டு, மார்க்சிஸ்ட் கட்சியினர், உடுமலை நகர் முழுவதும் வலம் வந்தனர். பின்னர், உடுமலை நகரச்செயலாளர் தண்டபாணி தலைமையில் தட்டியை உடுமலை மூணார் சாலை எலைய முத்தூர் பிரிவில் வைத்தனர். இதுகுறித்து அப்பகுதி மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறுகை யில், அரசு நிர்ணயம் செய்த தொகையை விட பல மடங்கு அதிகமான தொகையை வாங்கும் உடுமலை வட்டார போக்கு வரத்து அதிகாரிகளை கண்டித்து இந்த தட்டி வைக்கப்பட்டது. இந்த தட்டியை திருடிய நபர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வரும் 22 ஆம் தேதி உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் முன்பாக உடுமலை நகரக்கமிட்டியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும், என்றனர்.