districts

img

அதிகாரிகள் காலில் விழுந்து பொதுமக்கள் கோரிக்கை

சேலம், ஜன.27- கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம், என வலியு றுத்தி, ஞாயிறன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளின் காலில் விழுந்து பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். சேலம் மாவட்டம், கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சத்யா நகர் பகுதியில், குடியரசு தின விழாவை முன்னிட்டு ஞாயி றன்று கிராம சபை கூட்டம் நடை பெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம குமாரி தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட  அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, கடந்த ஐந்து ஆண்டுக ளாக சாலை, கழிப்பிடம் உள்ளிட்ட  எந்தவித அடிப்படை வசதியும் செய்து தராதது குறித்து பலமுறை கிராம சபை கூட்டத்திலும், மாவட்ட நிர் வாகத்திடமும் முறையிட்டும் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, உட னடியாக அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க  வேண்டும். மேலும், கொண்டப்ப  நாயக்கன்பட்டி ஊராட்சியை சேலம் மாநகராட்சியுடன் இணைக்க அதி காரிகள் நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். எங்கள் ஊராட்சியை  மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது எனக்கூறி பொதுமக்கள், அதிகாரிகள் காலில் விழுந்து கண் ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான காணொலி காட்சி கள் இணையத்தில் வைரலாகி வரு கிறது. தடங்கம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு இதேபோன்று, தருமபுரி மாவட் டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற் குட்பட்ட தடங்கம் கிராம ஊராட்சி யில், கணிசமாக மிகவும் பிற்படுத் தப்பட்ட, பட்டியலின மற்றும் இரு ளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பல ருக்கு சொந்த நிலம் இல்லை. விவ சாய கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். இந்த ஊராட்சியை தருமபுரி நகராட்சியுடன் இணைப் பதால் ஊரக வேலைத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயத் தொழி லாளர்களுக்கு வேலை கிடைக் காது. வீட்டு வரி, சொத்து வரி உயர்வு கடுமையாக இருக்கும். போதுமான பணியாளர், கட்ட மைப்பு வசதி இல்லாத நிலையில், நகராட்சியை விரிவாக்கம் செய் தால் சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்படும். நகராட் சியுடன் இணைப்பதற்கு ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர்.  இந்நிலையில், ஞாயிறன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மக்களின் கருத்து  கேட்காமல் நகராட்சியுடன் இணைக் கக்கூடாது, என வலியுறுத்தி தீர்மா னம் நிறைவேற்ற மக்கள் வலியு றுத்தி பேசினர். ஆனால், அதிகாரி கள் தீர்மானத்தை முன் மொழி முடி யாது என்றதால், ஊரக வேலைத் திட்ட தொழிலாளர்கள் உட்பட பலர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தடங்கம்  கிளைச் செயலாளர் ஆதிமூலம் தலை மையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு அளித்தனர். வயலில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் நகராட்சியுடன் தட்டாங் குட்டை, காடச்சநல்லூர், எலந்த குட்டை, சமயசங்கிலி, பள்ளிபா ளையம் அக்ரஹாரம் ஆகிய கிராம ஊராட்சிகள் இணைக்கப்படும் என வும், ஆலப்பாளையம் பேரூராட்சி யுடன் புதுப்பாளையம் கிராம  ஊராட்சி இணைக்கப்படுவதாக வும் அரசாணை வெளியிடப்பட்டது.  இந்நிலையில், சமய சங்கிலி ஊராட் சியைச் சேர்ந்த பொதுமக்கள், நக ராட்சியுடன் தங்கள் கிராமத்தை இணைத்தால் எங்களது வாழ்வாதா ரம் பாதிக்கப்படும். விவசாயம் முற் றிலும் அழிந்துவிடும் சூழ்நிலை  உருவாகும். விவசாயத் தொழிலை  மட்டுமே நம்பியுள்ள எங்களது பகுதியை நகராட்சியுடன் இணைப் பதை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட் டங்களை மேற்கொண்டு வருகின்ற னர். இந்நிலையில், ஞாயிறன்று சமய சங்கிலி கிராமத்தில் நடை பெற்ற கிராம சபை கூட்டத்தை புறக் கணித்து பொதுமக்கள் வயல் வெளியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கூட்டத்திற்கு வந்த வளர்ச்சி அலுவலர் கிரிஜா விடம், ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை ரத்து  செய்யவில்லை எனில், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றை திரும்ப ஒப்படைக் கும் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர். சிபிஎம் ஆர்ப்பாட்டம் நாமக்கல் மாவட்டம், தட்டான் குட்டை ஊராட்சியை பள்ளிபாளை யம் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓலப்பாளையம் காமராஜர் சிலை  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், ஒன்றி யச் செயலாளர் எஸ்.சந்திரமதி, மாவட்டக்குழு உறுப்பினர் மு.மணி கண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.