சேலம், நவ.18- சேலம் காவிரியாற்றில் இறந்து கிடந்த மீன்கள் தொடர்பாக மீன்வளத் துறையினர் சம்பவ இடத் திற்கு வந்து, இறந்து கிடந்த மீன்கள் மற்றும் தண்ணீரை ஆய்வுக்காக சேகரித்து சென்றனர். சேலம் மாவட்டம், மேட்டூர் காவிரியாற்றில் கடந்த சில நாட்களாக மீன்கள் இறந்து வருகிறது. இந்நிலையில் மேட்டூர் நீர்தேக்க பகுதிகளாக சங்கிலி முனியப்பன் கோவில், மாதை யன் குட்டை, நாட்டாமங்கலம், காவேரி கிராஸ் பகுதியில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதால் தண்ணீர் மாசடைவ தோடு துர்நாற்றம் வீசி வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த மேட்டூர் மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்கள் இறந்து கிடந்த இடத்தில் தண்ணீர் மாதிரிகளையும், இறந்து போன மீன்களை யும் சேகரித்தனர். இதன்பின் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை கிருஷ்ணகிரி மாவட்டம், புங்கம்பட்டியில் உள்ள வளங் குன்றா நீர் உயிரி வளர்ப்பு ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், தண்ணீர் மற்றும் மீன்களை ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள் ளது. இந்த ஆய்வு முடிவு வெளியான பிறகு மீன்கள் இறப்ப தற்கான காரணம் தெரியவரும், என தெரிவித்தனர்.