districts

img

அரிசி கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூலை 27- அரிசி கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.  சேலம் மாவட்டத்தில் நியாய விலை  கடைகள் மூலமாக மானிய விலையில் அரசு மக்களுக்கு உணவுப் பொருட் களை வழங்கி வருகிறது. இந்நிலை யில், ரேசன் பொருட்களை முழுமை யாக மக்களுக்கு செல்ல விடாமல் அதி காரிகள் சிலர் ரேஷன் அரிசி உள்ளிட்ட  பொருட்களை கடத்தி விற்பனை செய்து  வருவது தொடர் நிகழ்வாக உள்ளது.  ரேஷன் அரிசியை கடத்தி அரவை செய்து பெரிய அளவில் ஒரு சில நபர் கள் துணையுடன் அதிகாரிகள் லாபம் ஈட்டி வருகின்றனர். நியாய விலை கடை  ஊழியர் முதல், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வரை இச்செயலில் ஈடுபடுகின்றனர். ரேஷன் அரிசி கடத்த லில் ஈடுபடுபவர் மற்றும் சம்பந்தப்பட்ட வாகனங்களை பிடித்து பல முறை மார்க் சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள், வாலிபர் சங்க நிர்வாகிகள் காவல் துறையின ரிடம் ஒப்படைத்துள்ளனர். இருப்பினும்  அரிசி கடத்தல்காரர்கள் அற்பத்தொ கையை அபராதமாக கட்டி வெளியே  வந்து மீண்டும் கடத்தல் வேலைகளில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற தொடர் சம் பவங்கள் அதிகாரிகளின் துணையின்றி  செய்ய முடியாது. காவல் துறையும்  அரிசி கடத்தல்காரர்களை பிடித்து கொடுத்தால் அவர்கள் மீது வழக்கு போடாமல் பிடித்து கொடுப்பவர்கள் மீதே பொய் வழக்கு போடுவதும் நடை பெறுகிறது. 

எனவே வெகுமக்களுக்கு சென்று சேர வேண்டிய நியாவிலைக்கடை பொருட்களை கடத்தி விற்பவர்கள் மற் றும் துனை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு சேலம் கிழக்கு மாநகர செயலாளர் பொன்.ரமணி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில், மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, பி.ராமமூர்த்தி, டி.உதயகுமார், எம். குணசேகரன், மேற்கு மாநகர செயலா ளர் எம்.கனகராஜ், வடக்கு மாநகர செய லாளர் என்.பிரவீன் குமார் மற்றும் மாவட் டக்குழு உறுப்பினர்கள், முன்னணி  ஊழியர்கள் திரளானோர் பங்கேற்ற னர்.