ஈரோடு, ஜன.5- நூறுநாள் திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க அந்தியூர் தாலுகா மாநாட்டில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அனைத்துவகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான நலசங்கத் தின் அந்தியூர் தாலுகா மாநாடு செவ் வாயன்று தோழர்கள் டி.லட்சும ணன், வி.நடராஜன் நினைவரங்கத் தில் நடைபெற்றது. இம்மாநாட் டிற்கு தாலுகா தலைவர் டி.சாவித் திரி தலைமை வகித்தார். சங்கத்தின் கொடியை எஸ்.நல்லப்பன் ஏற்றி வைத்தார். தாலுகா செயலாளர் (பொ) பி.முருகன் அறிக்கையை முன்வைத்து பேசினார். இதில், மாவட்ட செயலாளர் (பொ) ஆ. சகாதேவன், மாநிலக்குழு உறுப்பி னர் வி.ராதாகிருஷ்ணன், விதொச தாலுகா செயலாளர் எஸ்.வி.மாரி முத்து, சிபிஎம் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தாலுகா செயலா ளர் ஏ.கே.பழனிசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், மாற்றுத்திறனா ளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக குறைந்தபட் சம் ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற் றோருக்கு ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும். 100 நாள் வேலைவாய்ப் புத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிக ளுக்கு 4 மணி நேரம் மட்டுமே வேலை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிக ளுக்கு வேலைவாய்ப்பினை உத்தர வாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, மாற்றுத்திற னாளிகள் சங்க அந்தியூர் தாலுகா தலைவராக டி.சாவித்திரி, செய லாளராக பி.முருகன், பொருளாள ராக அன்னகொடி, உதவித் தலை வர்களாக எஸ்.நல்லப்பன், ஆர். முருகேசன், உதவிச் செயலாளர்க ளாக மாடசாமி, மாதேஷ் உட்பட 20 பேர் கொண்ட தாலுகாகுழு தேர்வு செய்யப்பட்டது. நிறைவாக பச்சா பாளையம் செயலாளர் பி.சிவ மணி நன்றி கூறினார்.