districts

img

140 ஏக்கர் ஏரி நிலம் ஆக்கிரமிப்பு

சேலம், ஜூலை 29- 140 ஏக்கர் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து, தவறாக பட் டாவை மாற்றி விற்பனை செய்ததை கண்டித்து 50 மேற் பட்ட விவசாயிகள் திங்களன்று ஆட்சியரிடம் மனு அளித் தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் துலுக்கனூர் பகு தியில் உள்ள 140 ஏக்கர் அளவு கொண்ட நத்தீர் சாஹிப் ஏரி உள்ளது. அந்த ஏரிக்கு தவறுதலாக உரிமை மாற்றம் செய்து சுமார் 30க்கும் மேற்பட்ட நபர்களுக்கு விற்பனை செய்து பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஏரியை அழித்து பட்டா போட்டதை கண்டித்து விவசாயிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் உயர் நீதிமன்றம் ஏரி நிலத்தை மீட்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. இருப்பி னும் இதுவரை ஆக்கிரமிப்பாளர்களை அகற்றாமல் அரசு நிர்வாகம் இழுத்தடிப்பு செய்துள்ளது. எனவே 140 ஏக்கர் ஏரி நிலத்தை மீட்க வேண்டும். அப்பகுதியில் உள்ள விவசாயம் செழிக்க உடனடியாக ஏரியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.