districts

img

அருந்தியர் சமூகத்தைச் சேர்ந்தவரின் நிலம் ஆக்கிரமிப்பு - ஆட்சியரிடம் புகார்

தருமபுரி, ஜன.29- காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளி கிராமத்தில், பூர்வீக சொத்தை மாற்றுச் சமூகத்தினர் ஆக்கிரமிப்பு செய் துள்ளதை மீட்டு தருமாறு அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த வர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித் துள்ளார். இதுதொடர்பாக தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட் டம், கெரகோடஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என் பவர் தனது குடும்பத்தினருடன் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, நான் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த வன். வறுமையின் காரணமாக பெங்களூரில் குடும்பத்துடன் கூலி வேலை செய்து வருகிறேன். அவ்வப்போது ஊருக்கு  வந்து செல்வேன். என்னுடைய தந்தை சின்னசாமிக்கு சொந்தமாக கெரகோடஅள்ளி கிராமத்தில் 78 சென்ட்  நிலம் இருந்தது. இந்நிலையில் என் தந்தை கடந்த 1985 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். என் தந்தை இறந்த பிறகு, கடந்த 2008 ம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி என் தந்தை கிரையம் செய்த கொடுத்தாக கெரகோடஅள்ளி பஞ்சயாத்தை சேர்ந்த சின்னமிட்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த செவத்தான் மற்றும் செவத்தான் மகன் கள் ரவி ராஜா, சிவன், கலையரசி ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்து எனக்கு சொந்தமான இடத்தை கிரையம் பதிவு செய்துள்ளனர். இதன்பிறகு இவர்கள் இந்த நிலத்தை சேலத்தை பரத்குமார் என்பவருக்கு விற்பனை செய்துள்ள னர். என் நிலத்தை அபகரித்தவர்கள்,  ஆதிக்க சமூகத்தை  சேர்ந்தவர்கள். ஆள்பலம் பணபலம், அரசியல் செல்வாக்கு  உள்ளதால் இவர்கள் என் குடும்பத்தை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். எனவே, எங்கள் பூர்வீக சொத்தை மீட்டு தர வேண்டும். எங்கள் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண் டும். நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டபடியான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட் டுள்ளார்.