districts

img

வீட்டுவசதி வாரியத்தின் வீடுகளை பயனாளிகளுக்கு பெற்று தர நடவடிக்கை - சிபிஎம் வேட்பாளர் உறுதி

உடுமலை, பிப்.13-  உடுமலை நகராட்சி 13 ஆவது வார்டில் மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பாலதண்டபாணி பொது  மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப் போது, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக உடுமலை  பகுதி சாதிக்நகர் மற்றும் தங்கமாள் ஓடை பகுதியில் குடியி ருக்கும் பொதுமக்களுக்கு புக்குளம் பகுதியில் கட்டபட்டு வரும் வீட்டுவசதி வாரிய வீடுகள் ஒதுக்கப்படும் என  கூறி அவர்கள் தங்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிக் கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.   இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் புக்குளம்  கட்டிட வேலைகள் முடிந்து, திறப்பு விழா நடைபெற்றும், பொது மக்களுக்கு வீடுகள் ஒதுக்கவில்லை. இதனையடுத்து கட்டி முடிக்கப்பட்ட அந்த வீடுகளை பொது மக்களுக்கு ஒதுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யில் உடுமலை நகரட்சி மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தின் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதனை  தொடர்ந்து, அடுத்த மாதம் அனைத்து பயனாளிகளுக்கும் வீடுகள் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில்,  தேர்தல் அறிவிப்பால் நின்றுபோன வீடு ஒதுக்கீடுகளை முறையாக பெறவும், சாக்கடை, குடிநீர் போன்ற மக்களின் அடிப்படை தேவைகளுக்கு தொடர்ந்து இப்பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டி வருவதையும் பொதுமக்களிடம் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.