உடுமலை, பிப்.2- திருப்பூர் வன கோட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத் தில் வியாழனன்று உலக ஈர நில நாள் விழா கொண்டாடப் பட்டது. துணை இயக்குனர் தேஜஸ்வி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலர் சிவகுமார் வரவேற்புரை வழங்கினார். திருப்பூர் வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் கணேஷ் ராம் ஈர நிலங்கள் பாதுகாப்பு குறித்தும், அதன் முக்கியத்து வம் குறித்தும், நமது ஊரில் உள்ள ஏரி, குளம், குட்டை போன்ற நீராதாரம் உள்ள பகுதிகளை பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், சிறப்பு விருந்தினர்க ளாக நிகிலேஷ் மற்றும் மருத்துவர் அருண் வெங்கடேசன், கலந்து கொண்டு, ஈர நிலங்கள் குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் சிறப்புரையாற்றினர்.