districts

img

குடியிருப்பு பகுதியில் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு

உடுமலை, ஜன.3- கல்வி நிலையங்கள் மற்றும் குடியி ருப்பு  இருக்கும் பகுதியில் தனியார் மது  அருந்தும் பார் அமைக்ககூடாது என்று  பொதுமக்கள் பெதப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் செவ்வாயன்று மனு அளித்தனர்.  அம்மனுவில், குடிமங்கலம் ஒன்றி யம், பெதப்பம்பட்டி நால் ரோடு பகுதி பொள்ளாச்சி சாலையில் தனியார் இடத் தில் நவீன மது பானக்கூடம் அமைப்ப தற்கான வேலைகள் நடைபெறுகிறது.  இப்பகுதியில் கோவில்கள், கல்விக் கூடங் கள், சந்தை, பொதுமக்கள் குடியிருப்பு கள், மருத்துவ மனைகள் உள்ளது. மேலும், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக் கான மாணவர்கள் இங்கு உள்ள பள்ளி களுக்கு வந்து செல்லும் பரபரப்பான பகுதியாகும். இங்கு மதுபானக்கூடம் அமைக்ககூடாது, ஏற்கனவே இந்த பகு தியில் இருக்கும் இரண்டு மதுக்கடை களால் தினமும் பல பிரச்சணைகள் நிலவுகிறது. ஊராட்சி முழுவதும் காலி பாட்டில்கள் உடைத்து போட்டு விட்டு  சென்று விடுகிறார்கள். எனவே ஏற்க னவே இப்பகுதியில் உள்ள மதுக் கடைக ளையும் மூட வேண்டும், புதிதாக மது பானக்கூடத்தை திறக்க கூடாது என மனு அளித்தனர்.