தருமபுரி, ஜூன் 5- வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் நடைபயணத்திற்கு தருமபுரி மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் பள்ளி யில் சத்துணவு மையங்கள் உள்ளது. 40 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது. ஒவ்வொரு சத்துணவு ஊழிய ரும் 3முதல் 7சத்துணவு மையங்களை கூடு தல் பொறுப்பாக பார்த்து வருகின்ற னர்.மேலும், சமையலர் உதவியாளர்கள் இல்லாமல் பல சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. எனவே, ஓய்வு பெற்று செல்லும் சத்துணவு ஊழியர்க ளுக்கு ரூ. 5 லட்சமும், சமையளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கவேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்து, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் 7 முனைகளில் நடைபயணம் நடைபெற்று வருகிறது . அதன் ஒருபகுதியாக ஓசூரிலிருந்து துவங்கி, தருமபுரி வந்த நடை பயணகுழு விற்கு மாவட்ட தலைவர் சி.காவேரி தலைமை வகித்தார். மாநில துணைத்தலை வர் ஆர்.எம்.மஞ்சுளா,மாநில செயலா ளர் பெ.மகேஸ்வரி ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன், மாவட்ட செயலாளர் ஏ.சேகர், பொருளாளர் கே.புகழேந்தி, தமிழ்நாடு வேளாண்மை அமைச்சு பணியாளர் சங்கத் தின் மாவட்ட தலைவர் ஆர்.ஜெயவேல், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட நிர்வாகி எஸ்.குணசேகரன்,பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜ், பொதுநூலகத்துறை அலுவலர் சங்க மாவட்ட நிர்வாகி குமரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக, ஓசூரில் இருந்து வந்த நடை பயணத்திற்கு தருமபுரி மாவட்ட எல்லை யான காரிமங்கலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.