திருப்பூர், மார்ச் 13- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊட் டச்சத்து விழிப்புணர்வு குறித்த கண்காட்சியை மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒருங் கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பேரணி, ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த கண்காட்சி, பாரம்பரிய சிறுதானிய சமையல் குறித்த கண்காட்சி மற்றும் போஷன் பக்வாடா குறித்த இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ் திங்களன்று துவக்கி வைத்தார்.இதைத்தொடர்ந்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொது மக்கள் குறை தீர்க்கும் அரங்கில் அனைத்து துறை அலுவலர் கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஊட்டச்சத்து உறுதி மொழி எடுக்கப்பட்டது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டார்கள்.