சென்னை, நவ.6- கடந்த 7 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்றிவரும் 4500 செவிலியர்களை அரசு அளித்த வாக் குறுதி படி பணிநிரந்தரம் செய்யக் கோரி முதலமைச்சருக்கு எம்.ஆர்.பி செவிலியர்கள் அஞ்சல் அட்டை அனுப்பி வருகின்றனர். 2019 ஆம் ஆண்டு எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட சுமார் 2,500 செவி லியர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தர செவிலியர்களுக்கு இணையான பணியை செய்யும் ஒப்பந்த செவிலி யர்களுக்கு சம வேலைக்கு சம ஊதி யம் வழங்க வேண்டும். பொது சுகா தாரத் துறையில் காலியாக உள்ள 2500 பணியிடங்களில் எம்.ஆர்.பி. மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி யாற்றி வரும் தற்காலிக ஒப்பந்த செவிலியர்களை பணியமர்த்த வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் வியாழ னன்று (நவ. 3) தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் நடைபெற்றது. இதுகுறித்து மநிலத் தலைவர் கு.சசிகலா கூறுகையில், மாநிலம் முழுவதிலும் இருந்து 3 ஆயிரத்திற் கும் மேற்பட்ட செவிலியர்கள் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் வருக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்பியுள்ளனர். முதல்வர் தனிக் கவனம் செலுத்தி கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண் டும். கோரிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை என்றால் வரும் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தமிழகத் தின் அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களை சந் தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். டிசம்பர் 16ஆம் தேதி கோரிக்கையை வலி யுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம், பெருந் திரள் முறையீடு நடத்த உள்ளோம். அப்போ தும் அரசு அழைத்துப் பேசி கோரிக்கை களை நிறைவேற்ற வில்லை என்றால் ஜனவரி மாதம் 31ஆம் தேதி முதல் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம், என் றார்.