கோவை, மே 5– கொரோனா தொற்று காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய, ஒப்பந்த செவிலியர்களை நிரந்தரப்படுத்துவோம் என தேர்தல் காலத்தில் திமுக அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி கோவையில் செவிலியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்ப டையில் பணியாற்றி வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களின் உயிர்களை பொருட்படுத்தாமல் மக்களின் உயிர்களை பாதுகாத்தவர்கள் இந்த ஒப்பந்த செவிலியர்கள். இவர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்ப டுவார்கள் என்று கடந்த தேர்தல் பிரச்சாரத் தின்போது திமுக வாக்குறுதி அளித்தது. இதன்பின்னர், திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டாகி விட்ட நிலையில், ஒப்பந்த செவி லியர்களை நிரந்தரப்படுத்துவது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆகவே, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொட ரிலேயே முதல்வர் ஒப்பந்த செவிலியர் களை நிரந்திரப்படுத்தும் ஆணையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு வட்டாட் சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.ராமலட்சுமி தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் தங்க முனீஸ்வரி, அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் பி.நடராஜன், துணை செயலாளர் சாமி நாதன், பிரகலதா, காயத்திரி உள்ளிட்ட ஏராளமான செவிலியர்கள் பங்கேற்றனர்.