districts

img

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

உடுமலை, ஜன.2- தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் மற்றும் மாநில கல் வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வழிகாட்டு தலின்படி திருப்பூர் மாவட்டம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்  பயிற்சி நிறுவனம் மற்றும்  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உடு மலை ஒன்றியம் சார்பாக மூன்றாம் பருவத்துக்கான தொடக் கப்பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் போடி பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. உடுமலை வட்டார கல்வி அலுவலர்கள் மனோகரன், ஆறு முகம் ஆகியோர் பயிற்சியை துவக்கி வைத்து, மூன்றாம் பரு வத்தில் உள்ள மாற்றங்களை தெளிவாக தெரிந்து கொண்டு  அதற்கு தகுந்தாற்போல் பள்ளிகளில் செயல்பாடுகளை மேற் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களிடம் எடுத்துக் கூறினர்.  திங்களன்று கணித பாடத்திற்கான பயிற்சி நடைபெற்றது. செவ்வாயன்று தமிழ் பாடத்திற்கும் அதைத்தொடர்ந்து ஆங் கில பாடத்திற்கும் எண்ணும் எழுத்தும் பயிற்சியானது ஒன்று  முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடைபெற உள்ளது.  பயிற்சியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மூன்றாம்  பருவத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள புதிய வழிமுறைகள் மற் றும் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. அரும்பு, மொட்டு, மலர் என்ற நிலைகளில் மாணவர்களை அடையா ளம் கண்டு அதற்கு தகுந்தாற்போல் நிலைக்கேற்ற முறையில் பயிற்சி செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பயிற்சியில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் ஒரு நாளுக்கு ஒரு பாடத்துக்கு ஒரு செயல்பாடு மூலமாக கற்றல் விளை வினை நிலை நிறுத்தும் விதமாக மூன்றாம் பருவம் அமைய  உள்ளது என்று பயிற்சியில் கூறப்பட்டது. ஆசிரியர்கள் பயிற்சி யின் சில செயல்பாடுகளை செயல் திட்டமாக பயிற்சியில் செய்து காண்பித்தனர்.  இப்பயிற்சியில் உடுமலை வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர்கள் காயத்ரி,சிவமணி, கந்தசாமி, ஆகியோர் பார் வையாளர்களாக இருந்தனர். கருத்தாளர்களாக கண்ணபி ரான்,மாரிமுத்து கிருஷ்ணவேணி , பார்த்தசாரதி ஆகியோர்  செயல்பட்டனர்.