கோவையில் 1888ஆம் ஆண்ட முதல் பஞ்சாலை தொடங்கப்பட்டது. அது, சி.எஸ்.ட பிள்யு. (கோயம்புத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ் என்று அழைக்கப்பட்ட சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்ற ஆங்கிலேய தொழில திபரால் தொடங்கப்பட்ட ஸ்டேன்ஸ் மில் ஆகும். பஞ்சாலைத் தொழிலுக்கு மட்டுமின்றி கோவையின் தொழில் வளர்ச்சிக்கும் வித் திட்டது ஸ்டேன்ஸ் மில்தான். ஸ்டேன்ஸ் மில்லைத் தொடர்ந்து மால் மில், காளீஸ் வரா, ரங்கவிலாஸ், ராதாகிருஷ்ணா மில் என 1930ஆம் ஆண்டு வரையிலும் கோவையில் அடுத்தடுத்து 8 பஞ்சாலைகள் தொடங்கப்பட் டன. தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என்பது உள்ளிட்ட கார ணங்களைக் கூறி 1974ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நாடு முழுவ திலும் இருந்த 123 பஞ்சாலைகள் தேசியமய மாக்கப்பட்டன. தற்போது மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் பொதுத் துறை நிறுவனமாக என்டிசி செயல்படு கிறது. இதன் வசம் இருந்த ஆலைகளில் 100 பஞ்சாலைகள் மூடப்பட்டு விட்டன. வெறும் 23 பஞ்சாலைகள் மட்டுமே தற்போது செயல்படும் நிலையில் உள்ளன. 23 ஆலைகளில் தென்னிந்தியாவில் மட்டும் 15 ஆலைகள் இயங்குகின்றன. தமி ழகத்தில், பங்கஜா மில்ஸ், கம்போடியா மில்ஸ், கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்டு வீவிங் மில்ஸ், ஸ்ரீ ரங்கவிலாஸ் மில்ஸ், முரு கன் மில்ஸ் என 5 ஆலைகள் கோவையில் செயல்படுகின்றன. சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் காளீஸ்வரா மில்ஸ், ராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடியில் பயனீர் ஸ்பின்னர்ஸ் ஆகிய மில்கள் தமிழகத்தில் செயல்படும் மற்ற 2 ஆலை களாகும்.
கொரோனா தொற்று பரவலுக்கு முன்பு வரையிலும் செயல்பட்டு வந்த இந்த ஆலை கள் பொது முடக்க காலத்துக்கு பிறகு திறக் கப்படவில்லை. கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட முழு முடக் கத்தின்போது ஆலைகள் மூடப்பட்டன. தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது பாதி ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. முழு முடக்கத்தில் இருந்து அரசு விலக்கு அளித்தபோது தனியார் பஞ்சாலைகள் இயங்கத் தொடங்கினாலும் என்டிசி ஆலை களை அரசு இயக்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 7 ஆலைகளிலும் ஒரு ஆலைக்கு சுமார் 300 நிரந்தரத் தொழிலாளர்களும், 200 தினக்கூலி ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணியாற்றி வந்தனர். கோவை ஸ்டேன்ஸ் மில்லில் மட்டும் மொத்தம் 200 தொழி லாளர்கள் பணியாற்றி வந்தனர். ஆலையைத் திறக்க வேண்டும், ஒப் பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக ஏராளமான போராட்டங்களில் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. இருப்பினும் நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு என்டிசி ஆலையையும் திறக்க ஒன்றிய அரசு முன்வரவில்லை.
நாடு முழுவதும் உள்ள பஞ்சாலைத் தொழிலாளர்கள், பொதுமக்களின் நலனுக் காக என்டிசி ஆலைகள் செயல்படும் என்று அப்போதைய அரசு அறிவித்தது. மூடிக்கி டந்த ஆலைகளை தொடர்ந்து இயக்குவதற் காக அப்போதைய அரசு கார்ப்பரேசனை உருவாக்கியது. ஆனால் தற்போது பொதுத்துறைக்கு சொந்தமான சொத்து களை விற்பனை செய்வதற்கு என்று தனியாக குழு அமைத்திருக்கிறது மோடி தலைமையி லான பாஜக அரசு. என்டிசியைப் பொறுத்தவரை இதில் கிடைக்கும் லாபத்தை என்டிசிக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்று இதற்காக இயற்றப்பட்ட சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள் ளது. தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், மக்களுக்கு மலிவு விலை யில் ஆடை வழங்க வேண்டும் என்ற லட்சியத் தில்தான் என்டிசி ஆலைகள் உருவாக்கப்பட் டன. தற்போது என்டிசி கழகத்துக்கு நாடு முழு வதும் சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பி லான சொத்துகள் உள்ளன. இவற்றை விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத் தில் ஒன்றிய அரசு செயல்படுகிறது. ஆலை களை இயக்கவும், நவீனப்படுத்தவும், தொழி லாளர்களுக்கு முழு ஊதியம் வழங்கவும் கையில் பணம் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்டிசி சொத்துகளை விற்பனை செய்த தன் மூலம் கிடைத்த ரூ.5 ஆயிரம் கோடி யில் மீதமிருக்கும் ரூ.2 ஆயிரம் கோடி என்ன வாயிற்று என்று கேட்டால் மௌனமே பதி லாக இருக்கிறது.
நாடு முழுவதிலும் உள்ள என்டிசி ஆலை கள் தினசரி 2.50 லட்சம் கிலோ நூலை உற்பத்தி செய்து வந்தன. கடந்த சுமார் 2 ஆண்டுகளாக என்டிசி தயாரிக்கும் நூல் சந் தைக்கு விற்பனைக்கு வராததால் தனியார் பஞ்சாலைகள் கொள்ளை லாபம் சம்பா தித்து வருகின்றன. சுமார் ரூ.1 லட்சம் கோடி சொத்துகளை கொண்ட இந்த ஆலைகளை சில ஆயிரம் கோடிகள் செலவிட்டு நவீனப்படுத்தினால் ராணுவம், காவல் துறை உள்ளிட்ட ஒன்றிய , மாநில அரசுத் துறைகளுக்குத் தேவை யான துணிகளை தயாரித்து பயன்படுத்துவ தன் மூலமே லாபத்தை ஈட்ட முடியும். ஆனால், அதிகாரத்தில் இருக்கும் மோடி அரசு, தனியாரிர் மற்றும் கார்ப்ரேட்டுகளின் விசுவாசியாக இருப்பதால், என்டிசி பஞ்சாலை தொழிலாளிகள் எக்கேடு கெட் டால் எனக்கென்ன என்கிற மனநிலையில் இருப்பதாக தொழிலாளர்கள் குற்றச்சாட்டு கின்றனர். ஆனாலும், எங்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் அனைத்தையும் வென்றெடுப்போம், என்டிசியை பாதுகாப் போம் என்கின்றனர் உறுதியோடு. (ந.நி)