பருவமழை: பொதுமக்களுக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு
கோவை, நவ.3- பொதுமக்கள் பருவமழை தொடர்பான சந்தேகங்களை மாநகராட்சியிடம் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறி விக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து அலுவலர்களுடனான ஆய்வுகூட்டம் மாந கராட்சி ஆணையர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற் றது. இக்கூட்டத்தில், அவிநாசி மேம்பாலத்தின் கீழ்பகுதி, கிக்கானி பாலம் ஆகியவற்றில் கூடுதலாக 2 அதிவேக மின் மோட்டார்கள் பயன்படுத்தி மழைநீரை வெளியேற்ற அதிகாரி களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தற்போது, பெரியகுளம், வாலாங்குளத்திலிருந்து வெளியேறும் உபரிநீரின் அள வினை கண்காணித்திடவும், தேவைப்படும் இடங்களில் மழை நீர் வடி கால்களை தூர்வாரிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கும் தலா 100 மூட்டைகள் வீதம் 500 மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைக்க அறிவு றுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மழைநீர் வடிகால் கள், சாலைகள், தெருக்களில் சாய்தளம் அமைத்து ஆக்கிர மிப்புகளை அகற்றும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் தினமும் கண்காணித்து, சாய்தள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண் டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி பிர தான அலுவலகத்தில் பொதுமக்கள் பருவமழை தொடர் பான தகவல்களை தெரிவிக்க ஏதுவாக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. பொது மக்கள் பருவமழை தொடர்பான சந்தேகங்களை 81900-00200, 0422-2302323 0422-2300132 ஆகிய எண்களின் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு
தருமபுரி, நவ.3- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20,000 கனஅடியாக அதி கரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 18,000 கனஅடியாக நீடித்த நிலையில், வியாழனன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 20,000 கனஅடியாக அதிகரித் துள்ளது. மேட்டூர் அணைக்கு கடந்த இருநாட்களாக நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக நீடித்த நிலையில் வியாழனன்று காலையும் நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக நீடிக்கிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளதால், உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக விநாடிக்கு 4,500 கன அடியும், நீர்மின் நிலையங்கள் வழியாக 21,500 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 750 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 23ஆவது நாளாக, அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.
49 பவுன் நகைகள் கொள்ளை
கோவை, நவ.3- கோவை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் 49 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், ராமநாதபுரத்தை அடுத்த நஞ் சுண்டாபுரத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன். நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரரான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பாலச் சந்திரன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். இந்நிலையில், இவரது மகன் முகுந்த் சந்திரா (23) வீட்டை பூட்டிவிட்டு தந்தையை பார்ப்பதற்காக மருத்துவ மனைக்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளே நுழைந்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 26 பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.60 ஆயிரம் ரொக்கம், 2 கேமராக்கள், கார் சாவி ஆகியவற்றை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனிடையே வீட்டிற்கு திரும்பிய முகுந்த் சந்திரா, வீட்டில் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சிய டைந்தார். இதுகுறித்து தகவலறிந்த ராமநாதபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, வீட்டில் பதிவாகி யிருந்த கைரேகைகளை சேகரித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இதேபோல் பீளமேடு அருகே உள்ள பாரதி காலனியை சேர்ந்தவர் பரமேஸ்வரி (50). இவர் கத்தார் நாட்டில் விற்பனை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் தனது வீட்டிற்கு வந்து, லாக்கரில் வளையல், செயின் உட்பட 23 பவுன் தங்க நகைகளை வைத்து விட்டு கத்தார் நாட்டிற்கு சென்றார். இதன்பின் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கோவைக்கு வந்தார். அப்போது லாக்கரை திறந்து பார்த்த போது அதிலிருந்த தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் பீளமேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
பிஏபி திட்டப்பணிகள் தியாகிகளுக்கு நினைவு மண்டபம்
ரூ.5.28 கோடிக்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு
கோவை, நவ.3- பிஏபி திட்டப்பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவு மண்டபம் மற்றும் பிஏபி திட்டம் உரு வாக காரணமானவர்களுக்கு சிலை அமைக்கும் பணிகளுக்கு ரூ.5.28 கோடிக்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சட்ட மன்றப் பேரவைக் கூட்டத்தொடரில், பரம்பிக் குளம் - ஆழியாறு பாசனத்திட்டம் உருவாக முக்கியக்காரணமாக இருந்தவர்களில் ஒருவ ரான வி.கே.பழனிசாமி கவுண்டருக்கு ஆழி யாறு அணையின் பூங்காவில் நினைவு மண்டபம் மற்றும் மார்பளவுச்சிலை அமைக்கும் பணிகள் ரூ.1கோடி மதிப்பீட் டில் நடைபெற்று வருகிறது. இதனை பிஏபி திட்டப்பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவு மண்டபமாக மாற்றி அமைக்கப்படும். மேலும், பொள்ளாச்சியில் செயல்படும் நீர் வளத்துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்திற்கு மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் “சி.சுப்பிரமணியம் வளாகம்” என்று பெயர் சூட்டப்படும்.
இவ்வளாகத்தில், விவசாயப் பெரு மக்களுக்குப் பயிற்சிகள் மற்றும் கருத் தரங்கம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த ஏது வாக ரூ.4 கோடி மதிப்பீட்டில் இரண்டு அடுக்குகள் கொண்ட புதிய அரங்கு கட்ட மைக்கப்பட உள்ளது. இம்மண்டபத்தில் பரம்பிக்குளம் - ஆழி யாறுத் திட்டப்பணிகள் குறித்துப் பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புகைப் படக் கண்காட்சி அமைக்கப்படும். இவ்வளா கத்தில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.பழனிசாமி கவுண்டர், முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியம், மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் பொள்ளாச்சி நா.மகா லிங்கம் ஆகியோரைப் பெருமைப்படுத்து கின்ற வகையில், அவர்களது உருவ சிலைகள் அமைக்க ரூ.30 லட்சம் என மொத்தம் ரூ.4.30 கோடி நிதி ஒதுக்கீடு செய் யப்படும் என்ற அறிவிப்பினை வெளி யிட்டார். இந்நிலையில், அரசின் கவனமான பரிசீல னைக்குப் பின்னர், அமைச்சரின் அறிவிப் பினை செயல்படுத்திடும் பொருட்டு, அர சாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் வி.கே.பழனிசாமி மணிமண்டபத்தினை, பிஏபி திட்டப்பணிகள் நடைபெற்றபோது ஏற் பட்ட விபத்தில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவு மண்டபமாக மாற்றி அமைக்க திருத்தியமைக்கப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.1 கோடிக்கு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போல் பிஏபி திட்டம் உருவாக காரணமாக இருந்த தலைவர்களின் பெயர் சூட்டல், அரங்க கட்டிடம், சிலைகள் அமைக்க நிர்வாக அனுமதியும், இப்பணிகளுக்கு திருத்திய மைக்கப்பட்ட திட்ட மதிப்பிடு ரூ. 4,28,71,010க்கு நிதி ஒப்பளிப்பும் செய்யப் பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருப்பூர், நவ. 3 - திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பஸ் நிறுத்தம் அருகே ராஜஸ்தான் மாநிலத்தவர் சார்பில் இயங்கி வரும் மொத்த விற் பனை கடையில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் பைகள் இருந்ததாக அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இதன்பேரில், கிராம நிர்வாக அலுவலர் சிவசாமி மற்றும் சுப்பிரமணி ஆகியோர் பெருமாநல்லூரில் உள்ள தனலட்சுமி கிரானா ஸ்டோர் கடையில் ஆய்வு செய்து ஏராளமான பிளாஸ்டி டம்ளர்கள் மற்றும் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்து கடைக்கு அபராதம் விதித்தனர்.
விளைநிலத்தில் கழிவை கொட்டிய ஊராட்சி விவசாயிகள் காவல் நிலையத்தில் முற்றுகை
திருப்பூர், நவ. 3 - திருப்பூர் அருகே பெருமா நல்லூர் ஊராட்சியில் சேகரமான குப்பை கழிவுகளை அந்த ஊராட்சி நிர்வாகம் அருகாமை கிராமத்தில் உள்ள விவசாய விளைநிலத்தில் கொட்டியுள்ளது. இதை எதிர்த்து விவசாயிகள் ஊர் வலமாகச் சென்று காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக் கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் உள் ளிட்ட குப்பைகளை லாரிகள் மூல மாக, அருகில் உள்ள வட்டாலபதி கிராமத்தில் பட்டா விவசாய நிலத் தில் இரவோடு இரவாக கொட்டப் பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தினர் இந்த செயலைச் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த நிலத்தின் அருகில் உள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்கள் குப்பைகளை அகற்றக் கோரி பெருமாநல்லூர் ஊராட்சி அலுவ லகத்தில் பலமுறை முறையிட்டனர். ஆனால் கழிவுகளை முழுவதும் அங் கிருந்து அகற்றாமல் குப்பைகளின் மேல் மண்ணைத் தோண்டி மூடி விட்டு சென்றுள்ளனர். நீண்ட நாட்கள் ஆகியும் குப்பை யை அகற்றாமல் இருந்ததால் அப்ப குதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பெருமாநல்லூர் கொண்டத்துக் காளி யம்மன் கோயிலில் இருந்து பெரு மாநல்லூர் காவல் நிலையம் வரை ஊர்வலமாகச் சென்று காவல் ஆய் வாளர் ஹேமலதாவிடம் புகார் அளித் தனர். பெருமாநல்லூர் ஊராட்சி நிர்வா கத்தின் மீது குற்றஞ்சாட்டிய நிலை யில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த போலீசார் அங்கு கழிவுகள் கொட்டியுள்ளதை உறுதி செய்தனர். அதனை உடனடி யாக அகற்ற ஊராட்சி நிர்வாகத்தி டம் அறிவுறுத்தினர். ஐந்து நாட்களில் கழிவுகளை அகற்றுவதாக ஊராட்சி நிர்வாகத்தி னர் உறுதி அளித்ததை அடுத்து விவ சாயிகள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இன்று மின்தடை
திருப்பூர், நவ.3- திருப்பூர் ஆண்டிப்பா ளையம் , சி.ஜி.புதூர் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பரா மரிப்பு பணி காரணமாக வெள்ளிக்கிழமை மின் தடை செய்யப்படுகிறது. இதனால் மங்கலம் சாலை, இடுவம்பா ளையம், ஆண்டிபாளையம், செல்லம்நகர், சுல்தான் பேட்டை உள்ளிட்ட பகுதிக ளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. என்று மின் வாரியம் தெரி வித்துள்ளது.
இரவு நேரத்தில் கடைகள் செயல்பட அனுமதி வழங்க கோரிக்கை
திருப்பூர், நவ.3- திருப்பூர் மாவட்டத்தில் இரவு நேர கடைகள் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என காவல் துறைக்கு வியாபா ரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்டச் செயலாளா் கணேசன், பல்லடம் சங்க செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் திருப்பூர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளரிடம் கூறியிரு்ப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை மட்டுமே வணிக நிறுவன கடைகள் திறந்திருக்க வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிறகு தற்போதுதான் அதிலிருந்து மீண்டு வருகிறோம். இந்நிலை யில் இரவு 10 மணிக்கு மேல் கடையை திறக்கக்கூடாது என் பதால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். வியாபாரிகள் நலன் கருதி தமிழக அரசு தமிழகம் முழுவதும் இரவு நேரத்தில் வணிக நிறுவனங்கள் திறந்து செயல்பட கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. அதனால் மாவட் டம் முழுவதும் இரவு 10 மணிக்கு பிறகும் கடையை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள் ளனர்.
பருவமழை: தீயணைப்பு துறையினர் ஒத்திகை பயிற்சி
உதகை, நவ.3- வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி நீல கிரி மாவட்டத்தில் தீயணைப்புத் துறையினர் ஒத்திகை பயிற்சி யில் ஈடுபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக ஜூன் முதல் செப்டம் பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் டிசம் பர் வரை வடகிழக்கு பருவமழையும், ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழையும் பெய்யும். நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை சராசரியாக 200 மில்லி மீட்டர், வடகிழக்கு பருவமழை 300 மில்லி மீட்டர், கோடை மழை 230 மில்லி மீட்டர் பெய்யும். ஆனால், நீலகிரியில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை 124 சதவிகிதம் கூடுதலாக பெய்தது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த அக்.15 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது தான் தொடங்கியுள் ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட அலுவலர் சத்தியகுமார் உத்தரவின் பேரில் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டால் பொதுமக்களை எவ்வாறு மீட்பது குறித்து, உதகை தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான குழுவினர் படகு இல்லத்தில் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.
நடைபாதையில் வைக்கப்பட்ட கடைகள் அகற்றம்
உதகை, நவ.3- உதகையில் நடைபாதையை ஆக்கி ரமித்து வைக்கப்பட்ட 50 கடைகளை காவல் துறையினர் அகற்றினர். இத னால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சர்வதேச சுற்றுலா தலமான உத கைக்கு ஏராளமானோர் வருகை தரு கின்றனர். இதனால் ஏப்ரல் முதல் மே மாதம் வரை முதல் சீசன், அக்டோபர் முதல் செப்டம்பர் வரை 2-வது சீசன், தொடர் பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் சேரிங்கிராசில் இருந்து லவ்டேல் சந்திப்பு, பிங்கர் போஸ்ட், தொட்டபெட்டா சந்திப்பு வரை போக்குவரத்து பாதிப்பால் வாகனங் கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற் கின்றன. உதகை நகரில் கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, லோயர் பஜார், மெயின் பஜார் உள்ளிட்ட சாலை களிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படு கிறது. கிராமப்புறங்களில் இருந்து அரசு பேருந்துகள் மூலம் உதகைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பய ணிகள் சாலை மற்றும் நடைபாதை களில் நடந்து செல்ல முடியாத அள வுக்கு ஆக்கிரமித்து கடைகள் வைக்கப் பட்டு உள்ளன. உதகை நகராட்சி மார்க்கெட் பகுதி யில் வியாபாரிகள் தங்களது கடையில் இருந்து சுமார் 1½ அடியை ஆக்கிரமித்து பொருட்களை விற்பனைக்கு வைக்கின் றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதற் காக அமைக்கப்பட்ட நடைபாதையில், நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் சாலை யில் இறங்கி நடந்து செல்வதால், விபத் துகள் ஏற்படுகிறது. மேலும், போக்கு வரத்து நெரிசலும் அதிகரிக்கிறது. இதனைத்தொடர்ந்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், நகராட்சி ஆணையா ளர் காந்திராஜன் மற்றும் வருவாய்த் துறையினர் ஆலோசனை மேற்கொண் டனர். இந்நிலையில், நகராட்சி ஆணை யாளர் காந்திராஜன் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர் மீனாட்சி தலை மையிலான நகராட்சி பணியாளர்கள் காபி ஹவுஸ் பகுதி, மாரியம்மன் கோவில் முதல் பேருந்து நிலையம் வரை சாலை மற்றும் நடைபாதைகளில் ஆக்கிரமிப்பு கடைகளை வியாழ னன்று பொக்லைன் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதன்படி மொத்த மாக 50 கடைகள் அகற்றப்பட்டன. அப் போது போலீசாரே நகர்வு கடைகளை அப்புறப்படுத்தியதோடு, கடைகளில் இருந்த பொருட்களையும் அகற்றினர். இதனால் கடைக்காரர்கள் நகராட்சி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து வருவாய் ஆய்வா ளர் இளங்கோகிலகுரு, உதகை மத்திய காவல் ஆய்வாளர் மணி குமார் தலை மையிலான போலீசார் கடைக்காரரு டன் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதா னப்படுத்தினர். இதைத்தொடர்ந்து நடைபாதையை மீண்டும் ஆக்கிரமித்து கடை வைத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவ டிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
மோதலை உருவாக்கும் வகையில் கருத்து பதிவிட்டவர் மீது வழக்கு
கோவை, நவ.3- கோவையில் கடந்த அக்.23 ஆம் தேதியன்று உக்கடம் கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கிஷோர் கே.சுவாமி என்பவர் இரு தரப்பினருக்கிடையே மோதலை உருவாக்கும் வகையிலான கருத்துக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந் தார். இதுபற்றி கண்காணித்து வந்த கோவை சைபர் கிரைம் போலீசார் கிஷோர் கே.சுவாமி மீது, 153 ஆவது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர் ஏற்கனவே குண்டர் சட் டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவியின் கழுத்தறுப்பு
ஈரோடு, நவ.3- பவானிசாகர் பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவி பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த வாலிபர் கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தை அறுக்க முயன்றார். மாணவி யின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந் தனர். இதனை கண்ட வாலி பர் தப்பி ஓடினார். இதுகு றித்து பவானிசாகர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து, பவானிசாகரைச் சேர்ந்த நவீன்குமார் (21) என்பரை தேடி வருகின்றனர்.