கோவை, ஆக.26- அரசு விடுமுறை அறிவித்தும் தனியார் பள்ளி இயங்கியதால் மாவட்ட கல்வி அலு வலர் உத்தரவின் பேரில் பிற்பகல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 26 ஆம்தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு நாள் அரசு விடுமுறை அறி விக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், புலிய குளம் பகுதியில் இயங்கி வரும் வித்யா நிகேதன் என்ற சிபிஎஸ்இ பாடத்திட்ட தனியார் பள்ளி இயங்கி உள்ளது. அங்கு பயி லும் LKG, UKG குழந்தைகளுக்கு கலை நிகழ்ச்சிகள் வைக்கப்பட்ட நிலையில், அக்கு ழந்தைகள் வண்ண உடையில் கிருஷ்ணர், ராதை வேடம் பூண்டு வருகை புரிந்து இருந்த னர். ஆனால், இதர வகுப்பினர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றதாக தெரிகிறது. அதனால், அந்த வகுப்பு மாணவர்கள் பள்ளி சீருடை பள்ளிக்கு திங்களன்று வருகை புரிந்து உள்ளனர். இது மாவட்ட கல்வி அலுவலர் கவனத் திற்கு சென்ற நிலையில், பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உத்தரவை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மதியம் 12 மணியுடன் விடுமுறை அளித்தது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கலை நிகழ்ச்சிக ளுக்காக பள்ளி வைக்கப்பட்டதாகவும் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் பிற்பகலுக்கு பின்னர் பள்ளிக்கு விடு முறை அளிக்கப்படுவதாகவும் பெற்றோர் களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட நிலையில், மாணவர்களின் பெற்றோர்கள் வந்து அவர்களது குழந்தைகளை அழைத் துச் சென்றனர்.