குடிநீர் வசதி கேட்டு சாலை மறியல்
குடிநீர் வசதி கேட்டு சாலை மறியல் மே.பாளையம், மார்ச் 22- மேட்டுபாளையம் அருகே உள்ள வெள்ளிகுப்பம்பாளை யத்தில் முறையான குடிநீர் வசதி கேட்டு அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளிகுப்பம் பாளையம் பகுதி. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 15 தினங்களுக்கு மேலாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறுமுகை – அன்னூர் சாலை யில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் ஊராட்சி தலைவர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். மூலையூரில் தண்ணீர் இல்லாத காரணத்தால் மாவட்ட ஆட்சியரிடம் பேசி விரைவில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித் ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்களது மறியலை கைவிட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட் டது.
மண்டல அதிகாரிகளுக்கு பயிற்சி
மண்டல அதிகாரிகளுக்கு பயிற்சி கோவை, மார்ச் 22- கோவை ஆட்சியர் அலுவலகத்தில், மண்டல அதிகாரிக ளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் தொடர் பான தீவிரமாக பணிகள் நடந்து வருகிறது. மாவட்டத்தி லுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குப்பதிவு சரி பார்ப்பு இயந்திரம் ஆகியவை அனுப்பும் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, 3,719 வாக்குப்பதிவு இயந்திரங் களும், 3,719 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 4,026 வாக்குப் பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும் என மொத்தம் 11,464 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இந்நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கையாளுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில், வடக்கு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ் தலைமையில் வியாழ னன்று நடந்தது. இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரத்தை எப்படி பயன்படுத்துவது, கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், அதற்கான பொருட்கள், தேர்தல் நாளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. வடக்கு மண்டல அலுவலர்க ளுக்கான இப்பயிற்சியில் 22 பேர் பங்கேற்றனர். இவர்கள், வரும் 24 ஆம் தேதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தையைக் கடத்த முயற்சி?
ஈரோடு, மார்ச் 22- சிவகிரி அருகே குழந்தையைக் கடத்த முயற்சித்ததாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே எல்ஜி வலசு பகு தியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் காலை வீட்டிற்கு அருகில் உள்ள மளிகைக் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், சிறுமியின் வாயில் துணியை வைத்து மூடி வண்டி யில் கடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, அப்பகுதி யில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி அருகில் சென்ற போது வண்டியை ஓட்ட முடியாமல் நிறுத்தி விட்டதாகவும், சுதாரித்துக் கொண்ட சிறுமி அந்நபர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு தப்பி வீட்டிற்குச் சென்றதாகவும், சொல்லப்படுகிறது. அங்கு தனது தாயாரிடம் நடந்த விபரங் களைக் கூற, சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.
தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு
உதகை, மார்ச் 22- நீலகிரியில், தேர்தல் தொடர்பான புகார்களை செல வின பார்வையாளர்களிடம் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான அருணா விடுத்துள்ள அறிக்கையில், வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழகத்தில் நாடாளு மன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் பணிகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, இந்திய தேர்தல் ஆணையம் நீலகிரி நாடாளு மன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு, இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்களை நியம னம் செய்துள்ளது. இதன்படி உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய தொகுதிக ளுக்கு செலவின பார்வையாளராக கிரண் நியமிக்கப்பட்டுள் ளார். பவானிசாகர், மேட்டுபாளையம், அவிநாசி ஆகிய தொகுதிகளுக்கு சந்தீப்குமார் மிஷ்ரா செலவின பார்வை யாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் தேர்தல் விதி மீறல்கள் குறித்த புகார்களை நாள்தோறும் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை உதகையில் உள்ள தமிழ கம் விருந்தினர் மாளிகையில் நேரில் சந்தித்து தெரிவிக் கலாம். மேலும் நீலகிரி தொகுதிக்குட்பட்ட தேர்தல் தொடர் பான புகார்கள் ஏதும் இருப்பின், தேர்தல் செலவின பார்வை யாளர் கிரண் - 94899 30709, சந்தீப்குமார் மிஷ்ரா - 94899 30710 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தனியார் வேலைவாய்ப்பு முகாம் சேலம், மார்ச் 22- ஓமலூர் அருகே உள்ள கல்லூரியில் நடைபெற்ற, தனி யார் வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி செயிண்ட் ஜோசப் தனியார் மகளிர் கல்லூரி மற்றும் லயம் குரூப் ஆப் கம்பெனிஸ் இணைந்து, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதனை கல்லூரியின் தலைவர் ராஜாமணி தலைமையேற்று துவங்கி வைத்தார். இம்முகாமிற்கு வருகை புரிந்த 10க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களை, கல்லூரியின் செயலர் ஆண்டனி மரிய ஜான்சி வரவேற்றார். இதைத்தொடர்ந்து நேர்முகத்தேர்வு மற்றும் மூன்று சுற்றுகளாக வேலைவாய்ப்பு முகாம் நடை பெற்றது. இதில், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளில் இருந்து 10 வகுப்பு முதல் கல்லூரி படிப்பை நிறைவு செய்த மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 100 மேற்பட்டவர்களுக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
பணத்தை பெற்று தலைமறைவான மருத்துவர்: பாதிக்கப்பட்டவர்கள் புகார்
கோவை, மார்ச் 22- பொதுமக்களிடம் ஒன்னரைக் கோடி ரூபாய் வரை பணத்தை பெற்று தலை மறைவான மருத்துவரை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் மாநகர காவல் ஆணையர் அலுவல கத்தில் புகார் மனு அளித்தனர். கோவை மாவட்டம், சுங்கம் பகு தியைச் சேர்ந்தவர் சித்தையா. சென் னையில் உள்ள அரசு மருத்துவமனை யில் பணியாற்றி வந்த இவர், கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் கோவை அரசு மருத்துவமனையில் இருதயத்துறை பேராசியராகவும், அத்துறையின் தலை வராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற சித்தையா, அதன் பிறகு கோவையில் மூன்று இடங்களில் தனியாக கிளினிக் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் 12 ஆண்டுகளாக அவரிடம் பணியாற்றிய இ.சி.ஜி டெக் னீசியன் விஜயலட்சுமி என்பவரிடம், தனது மனைவி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும், வெளி நாட்டில் படித்து வரும் தனது குழந்தை களின் படிப்பு செலவிற்கு வழியில்லா மல் இருப்பதாக கூறி ரூ.8 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். அதற்காக பாண்டு பத்திரத்தில் எழுதி கொடுத் ததோடு, கையெழுத்திட்ட காசோலை யையும் கொடுத்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு பணம் வாங்கி, தற்போது வரை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். மேலும் விஜயலட்சுமியின் பேத்தியிடமும் ரூ.2 லட்சம் வாங்கியுள்ளார். அதுமட் டுமின்றி கைராசி மருத்துவர் என நம்பி சித்தையாவிடம் மருத்துவம் பார்க்க வந்த காங்கேயம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளிடம் அவர்களது உற வினர்களிடமும் ரூ.10 லட்சம் வரை இதே காரணங்களை சொல்லியும் பாண்டு பத்திரம் எழுதிகொடுத்தும் பணத்தை வாங்கியுள்ளார். அதே போல கிளி னிக்கிற்கு வரும் மருந்தக பிரதிநிதி களிடம் வாங்கிய மருந்துக்கு பணம் கொடுக்காமல், இதே காரணங்களைக் கூறி பல லட்சங்களை மோசடி செய் துள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட வர்கள் ஒன்றிணைந்து கடந்த நவம் பர் மாதம் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்த நிலை யில், வெள்ளியன்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகார் அளித்தவர்கள் தங்கள் பணத்தை உடனடியாக அவ ரிடம் இருந்து எப்படியாவது பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.
இளம்பெண்ணை கொன்று, வனப்பகுதிக்குள் வீசிச்சென்ற கொடூரம்; விசாரணை
சேலம், மார்ச் 22- ஏற்காடு மலைப்பாதையில் இளம்பெண்ணை கொலை செய்து, பெட்டியில் அடைத்து வனப்பகுதிக்குள் வீசிச்சென்ற நபர்கள் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுலாத் தலத்திற்கு செல்லும் மலைப்பாதையில் 40 அடி பாலம் அருகில் காட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனை ரோந்து பணியில் இருந்த வனக்காவலர் பெருமாள் என்பவர் கவனித்து, மலைப் பாதையையொட்டிய காட்டிற்குள் இறங்கி பார்த்தார். அங்கு ஒரு சூட்கேஸ் கிடந்தது. அதனுள் இருந்து துர்நாற்றம் வீசி யதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த வனத்துறை உயரதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்த்த னர். சூட்கேசிற்குள் இளம்பெண்ணின் சடலம் இருந்தது தெரி யவந்தது. 20 முதல் 30 வயதிற்குள் இருக்கும் அந்த இளம் பெண்ணின் உடல் அழுகி காணப்பட்டது. அவரை கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்கள், சடலத்தை சூட்கேசிற் குள் அடைத்து மலைப்பாதையில் காட்டிற்குள் வீசிச்சென் றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, கொலையுண்ட பெண் யார்? கொலை செய்து வீசியது யார்? என்பதை கண்டறிய துணை காவல் கண்கா ணிப்பாளர் அமலா அட்வின், காவல் ஆய்வாளர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள் ளது. ஏற்காட்டிற்கு வெளியூரைச் சேர்ந்த இளம்பெண்ணை அழைத்து வந்து, கொலை செய்து வீசியிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. அதன்பேரில், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட சுற்றியுள்ள மாவட்டங்களில் இளம்பெண் மாயம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு, யாரேனும் தேடப் பட்டு வருகின்றனரா? என போலீசார் விசாரித்து வருகின்ற னர். இதற்காக அந்தந்த மாவட்டங்களில் காணாமல் போன வர்கள் வழக்கு பட்டியலை தனிப்படை போலீசார் கேட்டுள்ள னர். மேலும், ஏற்காடு மலையில் இருந்து இறங்கும் ஆரம்ப பகுதியில் உள்ள தனியார் விடுதிகளில் இருக்கும் கண்கா ணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வரு கின்றனர்.
நிப்ட்-டீ பின்னலாடை கல்லூரியில் மாணவர் சேர்க்கை
திருப்பூர், மார்ச் 22 - திருப்பூரில் கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக நிப்ட்-டீ பின்னலாடை வடிவ மைப்புக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பின்னலாடை வடிவமைப்பு, உற் பத்தி, வணிகவியல் மற்றும் நிர்வாகவியல் போன்ற துறை பாடங்கள் பயிற்றுவிக்கப்படு கின்றன. இங்கு பயிலும் மாணவர்களுக்கு இதை நிர்வகிக்கும் 200 ஏற்றுமதியாளர்கள் தங்கள் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். கடந்த காலங்க ளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர் கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசின் அடல் இன்குபேஷன் சென்டர் மூலமாக ஆராய்ச்சி மற்றும் சுய வேலை வாய்ப்பினையும் உருவாக்கி தருகின்றனர். படிக்கும் மாணவர்களை திறன் வளர்ப்பு திட்டத்தில் பயிற்சி அளித்து உற்பத்தியாள ராக மாற்றுவதை இக்கல்லூரி நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. இதோடு மட்டுமின்றி இங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தந்து, மாணவர்க ளின் கல்வி கட்டணத்தை அவர்களே கட்டுவ தற்கான வருமான வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறது. மேலும் மாணவர்களுக்கு திருப்பூர் மாவட்டம் முழுவதும், மற்றும் கோவை, ஈரோடு நகரில் இருந்து தினமும் வந்து செல்ல பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது.ஆண் பெண் என இருப்பாலருக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதி மற்றும் சிறந்த கேண் டீன் வசதியும் உள்ளது. ஆயிரக்கணக்கான புத்தகங்களுடன் மிக பெரிய நூலகமும் இங்கு அமைந்துள்ளது. தமிழகத்திலேயே சிறந்த டிசைன் வடிவ மைப்பு ஆய்வகம் மற்றும் ஜவுளி ஆராய்ச்சிக் கான அனைத்து வசதிகளும் இங்கு ஏற்படுத் தப்பட்டுள்ளது. உலக தரத்தில் டிசைன் ஸ்டுடியோ ஒன் றும் இங்கு உருவாக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த பயிற்சி யும் இங்கு வழங்கப்படுகிறது. தற்பொழுது 2024 -2025 ஆம் கல்வி யாண்டிற்கான சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கல்லூரியில் சேர விருப்ப முள்ளவர்கள் அலைபேசி எண் : 80569 31111 தொடர்பு கொள்ளவும். மேலும் விபரங்க ளுக்கு https://admission.nifttea.ac.in என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ள வும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவிநாசியில் ஏழு கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது
அவிநாசி, மார்ச் 22 அவிநாசியில் கஞ்சா கடத்தி வந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் வியாழக்கிழமை கைது செய்தனர். அவிநாசி புதிய பேருந்து நிலை யம் அருகே போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது சாலையோரமாக நின்று கொண்டிருந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திர குசாலா(20), இந்திரா பஸ்ரா(23) ஆகிய இருவரையும் விசா ரித்தனர். அவர்கள் கையில் வைத்தி ருந்த பையினை சோதனை மேற் கொண்டதில், ஏழு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து, சிறையில் அடைத் தனர்.
கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்த ஒரிசா இளைஞர்
திருப்பூர், மார்ச் 22 - திருப்பூர் பவானி நகர் கிரிக்கெட் விளையாடும் மைதா னத்தில், ஒரிசா மாநில இளைஞர் ஒருவர் தன்னை தானே கத்தி யால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட் டார். வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நடைபெற்றது.அப்பகுதி பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று அந்த இளைஞரை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.42 லட்சம்: பறக்கும் படையினர் கைப்பற்றினர்
அவிநாசி, மார்ச்.22- திருப்பூர் செல்லும் சாலையில் பறக்கும் படையினர் சோத னையில் ஈடுபடும்போது ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்தைப் பறக்கும் படையினர் கைப்பற்றி னர். திருப்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ரவுண்டான பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடு பட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த நஹ்டாராமி டம் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் ஆவணம் இன்றி 1 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. இதைய டுத்து, கைப்பற்றப்பட்ட பணம் வட்டாட்சியரிடம் ஒப்படைக் கப்பட்டது.
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6.98 லட்சம் பறிமுதல்
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6.98 லட்சம் பறிமுதல் திருப்பூர், மார்ச் 22 - தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், திருப்பூர் வட்டாரத்தில் உரிய ஆவணம் இல்லாமல் தனித்த னியாக மூன்று வாகனங்களில் வெள்ளியன்று கொண்டு செல் லப்பட்ட ரூ.6 லட்சத்து 98 ஆயிரத்து 500 தொகையை தேர்தல் நிலைக்குழு கண்காணிப்பு அலுவலர்கள் கைப்பற்றினர். திருப்பூர் தாராபுரம் ரோடு பொல்லிகாளிபாளையம் பகுதி யில் வசந்தராஜ் என்பவர் காரில் கொண்டு வந்த ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் ரொக்க தொகையையும், காலேஜ் ரோடு கொங்க ணகிரி பேருந்து நிலையம் அருகே செல்வராஜ் என்பவர் காரில் கொண்டு சென்ற ரூ.93ஆயிரத்து 500 தொகையை யும், அதே போல் பூண்டி ரிங்ரோடு பகுதியில் பிரதீப் ராஜ் என்ப வரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் தொகையையும் தேர் தல் நிலைக்குழு கண்காணிப்பு அலுவலர்கள் கைப்பற்றி னர். மொத்தம் மூன்று பேரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூபாய் ஆறு லட்சத்து 98 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. இந்தத் தொகை திருப்பூர் சார் கருவூலத்தில் செலுத்தப்பட்டது. உரிய ஆவ ணங்களை சமர்ப்பித்து சம்பந்தப்பட்டவர்கள் இத்தொ கையை கருவூலம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் கண்காணிப்பு குழுவினர் தெரிவித்தனர்.