districts

வீட்டுமனை கேட்டு ஏப்.3ல் பெரும் முறையீடு மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு

பள்ளிபாளையம், மார்ச் 15- வீட்டுமனை கேட்டு அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஏப்.3 ஆம் தேதியன்று மனு அளித்து  முறையிடுவது என மாற்றுத்திறனாளி கள் சங்கம் அறிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், சூரியம் பாளையம் செங்குந்த சுப்பிரமணி சுவாமி கோவில் அருகில், தமிழ்நாடு  அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட அமைப்புக்குழு கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பி.பராசக்தி தலைமை ஏற்றார். சங்கத்தினுடைய மாநிலச் செயலாளர் ராஜேஷ் கலந்து கொண்டு மாநில குழு முடிவு கள் குறித்து உரையாற்றினார். இக் கூட்டத்தில், 2023 ஆம் ஆண்டிற்கு நாமக்கல் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் உறுப்பினர்களை பதிவு செய்வது, மாற்றுத்திறனாளிகள்  உதவித்தொகையை உயர்த்தக் கோரி ஜூலை 10 ஆம் தேதியன்று தில்லி நாடாளுமன்ற முன்பாக முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் நாமக்கல் மாவட் டத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வர்களை அழைத்துச் செல்வது, ஏப். 3 ஆம் தேதியன்று அனைத்து வட்டாட் சியர் அலுவலகங்களிலும் வீட்டு மனை கேட்டு விண்ணப்பம் அளித்து  முறையிடுவது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் ஏ.ரங்கசாமி, மாவட்ட  அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன், திருச்செங்கோடு தாலுகா தலை வர் துரைசாமி, சண்முகம், ரவிச் சந்திரன், அருக்காணி, சரவணன், மோகன், காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.