districts

img

ஜூன் 20இல் கோரிக்கை விளக்க பிரச்சார இயக்கம்

தருமபுரி, ஜூன் 9-  புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 20இல் கோரிக்கை விளக்க பிரச்சார இயக்கத்தை வெற்றிக ரமாக நடத்துவது என அரசு ஊழி யர் சங்கத்தின் ஆலோசனை கூட் டத்தில் முடிவெடுக்கப்பட்டது.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் சார்பில் ஊழியர் சந்திப்பு கோரிக்கை விளக்க பிரச்சாரம் நடத்துவது குறித்து ஆலோசனை விளக்க கூட்டம் தருமபுரி‌ சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செய லாளர் ஏ.சேகர் தலைமை வகித் தார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் மு.அன்பரசு, மாவட்ட செயலாளர்கள் காஞ்சிபு ரம் லெனின், கிருஷ்ணகிரி நடரா ஜன், தருமபுரி மாவட்ட பொருளா ளர் கே.புகழேந்தி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.குணசேகரன், பெ.மகேஸ்வரி, பிரபாகரன் மற் றும் குமரன் உள்ளிட்ட நிர்வாகி கள் பங்கேற்றனர். 

இதில், புதிய பென்சன் திட் டத்தை ரத்து செய்து வரையறுக் கப்பட்ட பழைய பென்சன் திட் டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊர்புற நூலகர்கள், எம்.ஆர்.பி செவிலி யர்கள், கிராம உதவியாளர்கள், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஊழியர்கள் உள்ளிட்ட அனை வருக்கும் வரையறுக்கப்ப ஊதி யம் வழங்கப்பட வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு சட்டப்படியான ஓய்வூதியம் வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி, ஊராட்சி ஆகிய அலுவல கத்தில் பணிபுரியும் ஊழியர்க ளுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். மேற் கண்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஜூன் 20 ம் தேதி முதல் ஜூன் 24 ஆம் தேதி வரை தமிழகம் முழு வதும் 7 முனைகளில் பிரச்சார இயக்கம் நடத்துவது என்றும், இதன் ஒருபகுதியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து ஜூன் 20 ஆம் தேதியன்று துவங்கும் பிரச்சாரத்தை சிறப் பாக நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. 

முன்னதாக, செய்தியாளர் சந் திப்பில் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் மு.அன்பரசு பேசு கையில், அரசு ஊழியர்கள் கோரிக் கையில் தமிழக முதல்வரின் மௌ னம் அரசு ஊழியர்களுக்கு அச் சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரி வித்தார். தமிழக அரசின் ஓர்  ஆண்டு சாதனையை சட்டப்பேர வையில் முதல்வர் அறிவித்தார். அதே தினத்தன்று அரசு ஊழியர் ஆசிரியர் மானியக் கோரிக்கை யும் நடந்தது. மானியக் கோரிக் கையில் அரசு ஊழியர் ஆசிரியர்க ளுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்த்தோம். மாறாக, தேர்தலில் அளித்த வாக்குறுதிக்கு மாறாக பழைய பென்சன் திட் டத்தை நிறைவேற்ற சாத்திய மில்லை என நிதி அமைச்சர் அறி வித்தார். இந்த பின்புலத்தில் தமிழ் நாடு அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.   அரசு ஊழியர்கள்‌அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்கள் சென்றடையும் வேலையை செய்து வருகிறோம். அரசு அலு வலகத்தில் நான்கு ஊழியர் செய்ய வேண்டிய வேலையை ஒரு அரசு ஊழியர் செய்து வருகி றார். தமிழகத்தில் 4.50 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள் ளது. காலிப்பணியிடங்கள் நிரப்பு வது குறித்து முதல்வரிடம் எந்த அறிவிப்பும் இல்லை. நிதி அமைச் சர் பழைய பென்சன் திட்டம் சாத்தி யமில்லை, காலிபணியிடங்களை அவுட்சோர்சிங் மூலம் நிரப்பப்ப டும் என்கிறார். ஆட்சி பொறுப் பெற்ற ஓர் ஆண்டுகாலமாகியும் எங்களுக்கு வழங்கவேண்டிய சலுகைகள் உரிமைகள் எதுவும் வழங்கப்படவில்லை.. எங்களின் உரிமை பிரச்சனையில் தமிழக முதல்வர் மௌனம் காப்பது எங்க ளுக்கு அச்சமாக உள்ளது. ஆகவே தமிழக முழுவதும் பிரச்சா ரம் மற்றும் தொடர் இயக்கங்கள் நடத்த உள்ளோம் என தெரி வித்தார்.