பள்ளிபாளையம், மே 10- கூலி உயர்வு விவகாரத்தில், விசைத்தறி நிர்வாகங்களின் அடாவடி போக்கு தொடர்கிற நிலை யில், சிஐடியு வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத் துள்ளது. நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் புதனன்று பள்ளிபாளையம் காவேரி ஆர்எஸ் அலுவலகத்தில், விசைத்தறி தொழிலாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய தலைவர் ஏ.அசன் தலைமையில் நடைபெற்றது. இதில்,பள்ளிபாளையம் வட்டாரம் முழுவதும் பணியாற்றக் கூடிய விசைத்தறி தொழிலாளர் களின் கூலி உயர்வு ஒப்பந்தம் 2019ஆம் ஆண்டு மார்ச்சில் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடைந்த நிலையில், தொழிற்சங்கத்தின் சங்கத்தின் சார்பில் பல போராட்டங்களை நடத்தியும், 23 மாதங்கள் கடந்ததும் கூலி உயர்வு ஒப்பந்தம் என்பது தீர்வு எட்டப்படாத நிலையில் இருந்தது. இதனால், விசைத்தறி நிர்வாகி களை கண்டித்து கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் காலவரை யற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என சிஐடியு சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனை யடுத்து, விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதியன்று தொழிற் சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இரண்டு மாத காலத்திற்குள் அதாவது (ஏப்ரல் மாத இறுதிக்குள்) ஒரு நல்ல ஒப் பந்தத்தை ஏற்படுத்தி தருகிறோம். ஆகவே, வேலை நிறுத்தத்தை ஒத்தி வையுங்கள் என்று கேட்டுக் கொண் டனர். இதனையேற்று, சிஐடியு வேலை நிறுத்த போராட்டத்தை ஒத்தி வைத்தது. தற்போது ஏப்ரல் மாதம் நிறைவு பெற்று மே மாதம் தொடங்கியுள்ள நிலையில், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இன்னும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, விசைத்தறி நிர்வாகங் களில் இந்த போக்கை கண்டித்து நேரடியாகவும், மறைமுகமாகவும் விசைத்தறி ஜவுளி தொழிலில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசும், தொழி லாளர் நலத்துறை ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல் படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும், மே 22 ஆம் தேதி முதல் காலவரை யற்ற வேலை நிறுத்த போராட் டத்தை மீண்டும் துவங்குவது என்று சிஐடியு சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், 75 சதவிகித கூலி உயர்வு உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி தொடர் போராட்டத்தை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில், சங்க மாவட்ட தலைவர் கே.மோகன், மாவட்ட செயலாளர் எம்.அசோகன், ஒன்றிய செயலாளர் எஸ்.முத்துக்குமார் மற்றும் ஒன்றியக் குழு நிர்வாகி கள் பல கூட்டத்தில் பங்கேற்றனர்.